Skip to main content

"விராட் கோலி கவனம் செலுத்த வேண்டிய இடம் இதுதான்" -நெஹ்ரா அறிவுரை

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

Ashish Nehra

 

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக இரு தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இழந்துள்ளது. பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி இரு போட்டிகளிலும் 300 ரன்களுக்கும் மேல் குவித்தது. அதே நேரத்தில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் படு சொதப்பலாக அமைய இரு போட்டிகளிலும் வெற்றிக்கு அருகில் கூட நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விராட் கோலியின் அணி வழிநடத்தும் திறன் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

 

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா இது குறித்து பேசுகையில், "விராட் கோலி முகமது ஷமிக்கு இரு ஓவர்கள் கொடுத்தார். அதன்பிறகு நவ்தீப் சைனியை அழைத்தார். வேறுமுனையில் இருந்து ஷமி பந்துவீச வேண்டும் என்று விராட் கோலி விரும்பியிருக்கலாம். ஆனால், புது பந்தில் பும்ராவிற்கு எதற்கு இரு ஓவர்கள் மட்டும் கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. பந்துவீச்சில் அவர் அடிக்கடி மாற்றம் செய்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அவர் கையில் 5 பவுலர்கள் மட்டுமே இருந்தனர். மயங்க் அகர்வால் மற்றும் ஹர்திக் பாண்டியா பந்துவீசியது களத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இந்தியாவிற்கு சாதகமாக போட்டி அமைந்திருந்தால் இவர்கள் இருவரும் பந்துவீசி நாம் பார்த்திருக்க முடியாது. விராட் கோலி அவசரப்படுவது தெரிகிறது. கடந்த போட்டியிலும் இதுதான் நடந்தது. 350 ரன்களை சில முறை அவர் சேசிங் செய்துள்ளார். ஆகையால் அவருக்கு அது பெரிய விஷயம் இல்லை. கடந்த போட்டியில் அவர் 375 ரன்கள் சேசிங் செய்வது போல விளையாடாமல் 475 ரன்கள் சேசிங் செய்ய இருப்பது போல விளையாடினார். விராட் கோலி அவசரத்தனம் மிகுந்த கேப்டனாக இருக்கிறார். அடிக்கடி பந்துவீச்சில் மாற்றம் செய்கிறார். இது அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய இடம்" எனக் கூறினார்.

 

 

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

T20 series against Australia; Indian team announcement

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

உலக கோப்பை முடிந்ததை தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இத்தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. 

 

இந்த நிலையில், இந்த தொடரில் பங்கு பெறும் 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ருத்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இஷான் கிஷான், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் ஷர்மா (WK), வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னாய், அர்ஸ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் துணை கேப்டனாக கடைசி இரு போட்டிகளுக்கு இந்திய அணியுடன் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.