Skip to main content

கொரியா வாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

Poetry book release ceremony of Tamils living in Korea!

 

கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் ஆராய்ச்சியாளருமான சகாய டர்சியஸ் பீ அவர்களின் முதல் கவிதை புத்தகமான ’சிதறல்கள்‘ வெளியீட்டு விழாவும் ஒரு நிகழ்வாக அமைந்தது.

 

விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காரை செல்வராஜ் ‘சிதறல்கள்’ புத்தகத்தை வெளியிட்டார். அதுமட்டுமின்றி அருமையான அறிமுக உரையும் நிகழ்த்தினார். புத்தகத்தின் 112 பக்கங்களையும் ஒருவரி கூட விடாமல் படித்த விதமும் குறிப்புகள் பல எடுத்து, தனக்குப் பிடித்த கவிதைகளை ரசிக்கும்படிச் சொல்லி புத்தகத்தை வெளியிட்ட விதமும் அனைவரையும் கவர்ந்தது. 

 

இந்தக் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு தென் கொரியாவிற்கான இந்திய தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரங்கநாதன் நல்லதொரு வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

 

இந்த நூல் வெளியீட்டு விழா குறித்து நூலாசிரியர் கவிஞர் சகாய டர்சியஸ் கூறும்போது, “இந்தப் புத்தகம் நல்ல முறையில் வெளிவர, பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்து என்னை வழி நடத்தி, நல்ல ஒரு முகவுரையும், வாழ்த்துரையும் அளித்த அன்பு அண்ணன் ஆதனூர் சோழனுக்கும், பலதரப்பட்ட வேலைகள் இருந்தும் மன மகிழ்வுடன் அழகானதொரு அணிந்துரையும் வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்த மலேசிய பாடலாசிரியர் யுவாஜி, மனதினை வருடிச்செல்லும் அழகானதொரு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த பேச்சாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட எனது அருமைத் தோழமை பொன் கோகிலம் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

கொரிய தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் எனது புத்தகத்தை வெளியிட உதவிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், நல்லதொரு வாழ்த்துரை வழங்கிய சகோதரி திருமதி யசோதா இராமசுந்தரத்திற்கும், என்னைத் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் எனது குடும்பத்தார் மற்றும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும், மேலும் அச்சிட்டு வெளிவர உதவிய சிபி பதிப்பகத்திற்கும் எனது உளம் கனிந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிலும் தொடரும் ஆதரவிலும் எனது எழுத்தின் சிறகுகள் இன்னும் விரியும்” என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர்; ஆஸ்திரேலியா நீதிமன்றம் அதிரடி! 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

australia overseas friends of the bjp leader balesh dhankhar related court judgement

 

ஆஸ்திரேலியாவில் உள்ள  சிட்னியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர். பாஜக பிரமுகரான இவர்  'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் தி  பி.ஜே.பி' எனும் பாஜகவின் வெளிநாட்டு உறுப்பினர்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் பாலேஷ் தன்கர் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் பல பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்து பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோவில் இருந்த பெண்களில் சிலர் சுயநினைவில்லாமல்  போதையில் இருந்துள்ளனர். அந்த விடீயோக்களில் இருந்தவர்களில் பெரும்பாலும் கொரிய நாட்டைச் சேர்ந்த  பெண்களாக இருக்கும் என போலீசார் கருதினர். இது மட்டுமின்றி பாலேஷ் தன்கர் மீது ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக ம குற்றம் சாட்டப்பட்டது.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  இவ்வழக்கு சிட்னி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்  தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாலேஷ் தன்கர் போதைப் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் பெண்களை பாலியல் கொடுமை செய்துள்ளார். இணையதளம் மூலம் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து  தனிமையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்  5 கொரிய பெண்களை தாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடி வரும் கொரிய பெண்களை தன்னுடைய பாலியல் இசைக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் பெண்களுக்கு மது அல்லது ஐஸ் கிரீமில்  மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து இவரிடம் தட்டிக்கேட்ட பெண்களை தாக்கியுள்ளார். மேலும் தனது படுக்கை அறையில் உள்ள கடிகாரத்தில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் பெண்களுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளையும், தன்னுடன் ஒத்துழைக்காத பெண்களை தாக்கும் காட்சிகளையும் அந்த கேமிரா மூலம் பதிவு செய்துள்ளார். இதன் பதிவுகளை போலீசார் கைப்பற்றியதன் அடிப்படையில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.