Skip to main content

மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதாக சந்தேகித்த நபர்... இலங்கையில் பீதி!

Published on 01/02/2020 | Edited on 03/02/2020

கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 



இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கர்த்தாரில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகித்த மருந்ததுவர்கள் அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவர், மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் இலங்கை முழுவதும் கொரோனா அச்சம் எழுந்துள்ளது. போலிசார் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்