Skip to main content

'இப்படியே போனால் 2035ல் பென்குயின்களே இருக்காது' - ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

'If things continue like this, there will be no penguins by 2035'-researchers are shocked

 

குறும்புத்தனத்தாலும், விளையாட்டுத்தனத்தாலும் பார்ப்பதற்கே பரவசமூட்டும் பறக்க முடியாத பறவை இனமான பென்குயின்கள் அழிவின் விளிம்பை நோக்கி நகர்ந்து வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

குறிப்பாக ஆப்பிரிக்க பென்குயின்கள் மிகவும் ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும் அவற்றைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க பென்குயின் என்ற ஒரு இனமே இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகளும் அதனால் இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களாலும் ஏற்கனவே மத்தி, நெத்திலி போன்ற மீன்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட கடல் பகுதிகளில் குறைந்து வருகிறது. இந்த வகை மீன்களை உணவாக எடுத்துக் கொள்ளும் பென்குயின்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே நோய், புயல் கடல், மனிதர்களால் கடலில் சேரும் மாசு என பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி பென்குயின்கள் அவதியுற்று வருகின்றன. எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஆப்ரிக்க பென்குயின்களை காப்பாற்ற முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மதுரை எய்ம்ஸ்; சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்! 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Madurai AIIMS; Application for Environmental Permit 

மதுரை மாவட்டம் தோப்பூரில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்திற்கு வெறும் ஒத்த செங்கல்லை மட்டும் நட்டு வைத்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்று கூறியது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த ஒத்த செங்கல்தான் இருக்கிறது என்று ஒரு செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தார். இது அரசியல் களத்தில் பலரது கவனத்தையும் பெற்றது.

இந்நிலையில், மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 221 ஏக்கரில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர்கள் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியருக்கான விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.