Skip to main content

பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் கனடாவில் மர்ம மரணம்!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

karima balouch

 

பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கரீமா பலூச். மனித உரிமைகள் ஆர்வலரான இவர் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர். பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசாங்கமும் இராணுவமும் செய்யும் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தனது சமூக வலைதளங்களில் பேசி வந்தார்.

 

பிபிசியின் ஊக்கமளிக்கும் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் 2016-ஆம் ஆண்டு இடம்பெற்ற கரீமா பலூச், பாகிஸ்தான் அரசும் இராணுவமும் அவர் மீது பயங்கரவாத குற்றம் சாட்டியதும் அங்கிருந்து தப்பி கனடா நாட்டில் சென்றார். கனடா சென்ற பிறகும், தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் பலுசிஸ்தான் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார்.

 

இந்தநிலையில் கரீமா பலூச் கனடாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கரீமா பலூச்சின் மரணம் குறித்து கனடா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்