Skip to main content

விஸ்வரூபம் எடுக்கும் கரோனா... விக்கித்துப்போய் நிற்கும் உலக நாடுகள்!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

gh

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 1,30,34,955 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75,81,525 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் மருத்துவமனைகளில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்காவில் அதிகப்படியான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்