Published on 15/11/2019 | Edited on 15/11/2019
பாகிஸ்தானில் ஏற்பட்ட தொடர் மழையின் போது மின்னல் தாக்கி, 24 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், தார்பார்க்கர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் இடையே பயங்கர மின்னல் ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள மித்தி, சாச்சீ , ராம்சிங் சோதா ஆகிய கிராமங்களை அடுத்தடுத்து, பயங்கர இடி முழக்கத்துடன் மின்னல் தாக்கியது.
![df](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zft5iKangp5U7-ufQSeJ2klyrzR6m05H3dNh5APP6fA/1573836355/sites/default/files/inline-images/ZDG.jpg)
இதில் 10 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள், மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தன.