Skip to main content

வெற்றியைத் தந்த மக்களுக்கு வினோத முறையில் நன்றி செலுத்தும் இளைஞர்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Young man who gives strange thanks to the people who gave him success

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் இருந்து வடமேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எம் .குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தம்பிதுரை அந்த கிராமத்திலேயே சொந்தமாக ஸ்டூடியோ வைத்து அப்பகுதி சுற்றுப்பட்டு கிராமங்களில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வீடியோ புகைப்படம் எடுத்துத் தருபவர். அதோடு தினசரி பத்திரிக்கைகளை ஏஜென்சி எடுத்து அவரது கிராமப் பகுதியில் விநியோகித்து வருகிறார். இந்தப் பணிகள் ஒரு பக்கம் அதோடு பொதுமக்களுக்கான தேவைகளை நேரம் காலம் கருதாமல் சேவை மனப்பான்மையோடு செய்து வருபவர்.

 

உதாரணத்திற்கு கரோனா நோய் கடுமையாக இருந்த நாட்களில் தடுப்பூசி முகாம்களைத் தனது ஊரில் நடத்துவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைத்து அவர்களோடு இணைந்து பணியாற்றியவர். அதோடு கரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு மக்கள் பயந்து தயங்கினார்கள், அப்போது தம்பிதுரை தடுப்பூசி போட வரும் அனைவருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை தன் சொந்த செலவில் வாங்கி அன்பளிப்பாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். இதனால் பலரும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தம்பி துறையின் செயல்பாடுகளை கண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இது மட்டுமல்ல ஊரில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை பாம்பு கடித்து விட்டது போன்ற அசம்பாவிதம் நேரும் போது உடனடியாக சென்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என மக்கள் பணியில் நேரம் காலம் பாராமல் செய்து வருகிறார் தம்பித்துரை.

 

Young man who gives strange thanks to the people who gave him success

 

இந்த நிலையில் மக்கள் பணியை மேலும் தொடர சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவரது பகுதியில் உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். மேலும் சிலர் போட்டியிட்டனர், அதனால் கடும் போட்டி நிலவியது. இருந்தும் 55 வாக்கு வித்தியாசத்தில் தம்பித்துரையை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக அப்பகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த தம்பித்துரை வித்தியாசமான ஒரு செயலை செய்துள்ளார். அது குறித்து அவரிடம் கேட்டபோது,  “திருமணமாகி மனைவி பிள்ளைகள் என என் குடும்பம் விரிவடைந்தது. அவர்களைக் காப்பாற்ற கிராமத்திலேயே போட்டோ ஸ்டூடியோ துவக்க முடிவு செய்தேன். அதற்கு முதலீடு செய்ய என்னிடம் பணம் இல்லை எங்கள் பகுதியில் இருந்த பல்லவன் கிராம வங்கி மேலாளர் நிர்மல் குமார் அவர்களிடம் சென்று வங்கி கடன் உதவி தருமாறு கேட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து மூன்றரை லட்சம் கடன் வழங்கினார்.

 

நாணயமான முறையில் அந்தக் கடனை திருப்பி செலுத்தினேன். பிறகு உள்ளாட்சித் தேர்தல் வந்தது என் கிராமம் மக்களுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதன் காரணமாக தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை 55 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். அவர்களுக்கு என்றும் நான் நன்றிக் கடன்பட்டவன். அந்த நன்றியை அவர்களுக்கு செலுத்தும் விதமாக ஒரு கார் வாங்கி உள்ளேன். இந்த கார் என் கிராம மக்களில் யாருக்காவது பிரசவம், திடீர் உடல் நிலை கோளாறுகள் நேரும்போது அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று  காப்பாற்றும். இப்படிப்பட்ட இன்றியமையாத பணிகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் எனது காரில் எனது வாழ்க்கையில் ஒளி பெற செய்த பல்லவன் வங்கி மேலாளர் நிர்மல் குமார் அவர்களின் பெயரை எழுதி வைத்துள்ளேன். அது அவருக்கு நான் காட்டும் நன்றி. அதே போன்று எனக்கு வாக்களித்த எனது கிராம மக்களுக்கு எனது நன்றி காணிக்கையாக இந்த இலவச சேவைக்கு இந்த கார் பயன் படுத்தப்படும்” என்கிறார் தம்பித்துரை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.