Skip to main content

உலக மீனவர்கள் தினம்... குடும்பத்துடன் மலர்தூவி கடல் அன்னையை பிரார்த்தித்த மீனவர்கள்!  

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

 

மீனவா்களின் வாழ்க்கை என்பது ஒவ்வொரு சூழலிலும், அச்சத்திலும், ஆபத்திலும் நிறைந்தவையாகும். எதையும் பொருட்படுத்தி கொள்ளாமல் புயல், மழை கடல் சீற்றத்தோடு வாழ்க்கையை வாழ எதிா்நீச்சல் போட்டு கொண்டிருக்கிறாா்கள். ஆனால் கரைகளில் இருக்கும் அந்த மீனவா்களின் குடும்பங்களோ கடலுக்கு போனவா்கள் திரும்ப வரும்வரை கண்ணீரும் கம்பலையுமாக இருப்பதுதான் இன்றைய யதாா்த்த சூழ்நிலை.

இந்தநிலையில் இன்று (20-ம் தேதி) உலக மீனவா்கள் தினம் நாடு முமுவதும் உள்ள கடற்கரை கிராமங்களில் கொண்டாடப்பட்டது. இதில் குமாி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராமங்களிலும் மீனவா் தினம் கொண்டாடப்பட்டது. இதில் குளச்சல் மீனவ கிராமத்தை சோ்ந்த விசைபடகு மீனவா்கள் விசைபடகில் குடும்பத்தினருடன் கடலுக்குள் சென்று விசைப்படகில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினாா்கள்.
          

பின்னா் அவா்கள் கடலுக்குள் மலா்கள் தூவி கடல் அன்னைக்கு மாியாதை செலுத்தி புயல் தாக்குதல் மற்றும் விபத்தில் இருந்து மீனவா்களை காப்பாற்ற வேண்டும் என வணங்கினாா்கள். தொடா்ந்து தெற்காசிய மீனவா் தோழமை பொதுச்செயலாளா் பாதிாியா் சா்ச்சில் மீனவா்களின் விசைபடகு, நாட்டு படகு, கட்டுமரம், வலைகள் மற்றும் தூண்டில்களுக்கு அா்ச்சிப்பு செய்தாா்.

தொடா்ந்து அவா் கூறும் போது... ஆண்டுத்தோறும் கொண்டாடப்படும் உலக மீனவா் தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று பல ஆண்டுகளாக அரசை வலியறுத்தி கேட்டு வருகிறோம். அரசுக்கு ஆண்டிற்கு 60 ஆயிரம் கோடி அந்நிய செலவாணியை மீனவா்கள்தான் ஈட்டி கொடுக்கிறாா்கள்.

மீனவா்கள் ஆழ்கடலில் 7 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை தங்கி மீன் பிடிக்கிறாா்கள். அந்த மீனவா்கள் நோய்வாய்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் காயம் அடைந்தாலோ அவா்களை கரையில் மருத்துவமனைக்கு கொண்டு சோ்க்க இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. இதனால் அவா்களை உடனடியாக மீட்க ஹெலிகாப்டா் தளம், ஹெலிகாப்டா் மற்றும் வான்வெளி ஆம்புலன்ஸ்க்கு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை கேட்டு வருகிறோம்.

மேலும்  இரண்டு ஆண்டுக்கு சுமாா் 25 மீனவா்கள் கடலில் மாயமாகிறாா்கள் இறந்தும் போகிறாா்கள். இது மீனவா்கள் மத்தியில் பெரும் கவலையாக உள்ளது. இதை தடுக்கும் விதமாக ஆழ்கடல் செல்லும் விசைபடகுகளுக்கு சேட்டிலைட் போன் மற்றும் ரோடியோ டெலிபோன்  வழங்க நடவடிக்கை எடுப்பதோடு கரையில் சக்தி வாய்ந்த தொலைத்தொடா்பு வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர் மீது தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Tamilnadu fisherman incident at sea involved srilanka

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் தற்போது மீன் பிடித் தடைக்காலம் என்பதால் நாகை மாவட்டம் செரூகூர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (28.04.2024) விசைப்படகில் மீன் பிடிக்க செல்லாமல் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்களின் முருகன் என்பவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று (29.04.2024) இரவு மின்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் இருந்த மீன்கள், மீன்பீடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

அச்சமயத்தில் படகின் உரிமையாளரான முருகன் கடற்கொள்ளையர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள் முருகனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க கடலில் குதித்த முருகனை சக மீனவர்கள் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்கொள்ளையர்கள் நடத்திய இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முருகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். நாகை மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.