Skip to main content

மத்திய, மாநில அரசுகளின் காதில் விழுமா? 'விவசாயிகளின் கோரிக்கை'

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

தமிழ்நாட்டின் மூலாதாரமாக உள்ள விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் அத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பேரவை கோரியுள்ளது.

 

farmers

 

மறைந்த ஈசாய் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையிலான அமைப்பு இன்று கோபிசெட்டிபாளையத்தில் பேரவை நடத்தியது. அதில் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டத்தினால் பெறப்பட்ட இலவச மின்சாரம் தொடர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்றும், சமீபகாலத்தில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் மக்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதால் விவசாயிகளின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்.

 

farmers

 

அதேபோல் மத்திய அரசு விவசாயிகளின் மீது தனி அக்கறை செலுத்தி விவசாயத்திற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் விவசாயிகள் கடன் சுமையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மத்தியில் பாஜக மோடி அரசு அமைந்த பிறகு இதன் எண்ணிக்கை மேலும் மேலும் கூடி வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் எதிர்பார்ப்பும் அவர்களின் கோரிக்கையும் மத்திய, மாநில அரசுகளின் காதுகளில் விழும் என்பது சந்தேகம்தான்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 Farmers are afraid of gangs who keep stealing goats

ஈரோட்டில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சமடைந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கரியாக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து  வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை பட்டியில் வந்து பார்த்தபோது அதிலிருந்த 3 ஆடுகள் மாயமாகி இருந்தன. விசாரணையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வடிவில் (66) என்பவரது பட்டியில் இருந்த மூன்று ஆடுகளும் திருட்டுப் போயிருந்தது. அடுத்தடுத்து இரண்டு பட்டியில் ஆடுகள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருட்டுப் போன ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டுப் போய் வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

விலங்குகளைச் சிதைக்கும் அவுட்டுக் காய்; 2 பேர் கைது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Out Kai, which destroys animals; 2 arrested

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.