Skip to main content

“என்னோடு வாழமாட்டீங்களா?” - கணவன் மீதான கோபத்தில் மனைவி தற்கொலை!

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Wife lost their life because she was separated from her husband

 

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் வெள்ளூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரியை காதலித்து 6 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம்  முரண்பட்டு கலிங்கப்பட்டியில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார் முனீஸ்வரி.     

 

கடந்த 15-ஆம் தேதி கணவர் கருப்பசாமியை அவர் வேலை பார்க்கும்  நாகலாபுரம் பட்டாசு ஆலையில் சந்தித்த முனீஸ்வரி,  “என்னை வைத்து  வாழப் போகின்றீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு கருப்பசாமி “பெரியோர்களை வைத்துப் பேசி முடிவு செய்து வாழ்வோம்.” எனக் கூறியிருக்கிறார். முனீஸ்வரியோ  “என்னுடன் வாழ்வீர்களா?  இல்லையென்றால் நான் சாகத்தான் வேண்டும்..” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். அன்று மாலை கலிங்கப்பட்டியில் உள்ள தன் அம்மா வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்ட முனீஸ்வரியை  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்து போனார். தனது மகளின் இறப்பு குறித்து நத்தம்பட்டி காவல்நிலையத்தில் முனீஸ்வரியின் தந்தை கருப்பையா புகாரளித்த நிலையில் வழக்கு பதிவாகியிருக்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.