Skip to main content

முதலமைச்சர் தனி விமானத்தில் துபாய் சென்றது ஏன்?- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

Why did the Chief Minister go to Dubai on a private plane? - Minister Thangam Southern Description!

 

சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (27/03/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது. தனிப்பட்டக் காரணங்களுக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். துபாய் வர்த்தக கண்காட்சி முடியும் தருவாயில் அங்கு சென்றது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

 

துபாய் இருந்து வீடியோ வெளியிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மேற்கொண்டுள்ள துபாய் வெளிநாட்டு பயணத்தைக் குறித்து, இன்று விமர்சனம் செய்து பேட்டியளித்துள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், தனி விமானத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, துபாய் பயண நேரத்தில், விமான வசதி கிடைக்காத காரணத்தால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி விமானத்திற்கு கூட, திராவிட முன்னேற்றக் கழகம் தான் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை நான் முதலிலே தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். 

 

முதலமைச்சரின் இந்த பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டுமல்ல, கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வேலை செய்து, உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய, ஒவ்வொரு தமிழ் குடும்பத்தினுடைய வளர்த்திக்காகவும், வாழ்விற்காகவும், அவர் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பதை நேற்று இங்கு வந்திருக்கக்கூடிய தமிழ் சமுதாயம், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வரவேற்பில் இருந்து நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

மற்றொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். நம்முடைய உலக வர்த்தக பொருட்காட்சி என்பது முடியுறும் தருவாயிலே முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று. இது கோவிட் காரணமாக தள்ளிப்போய் வந்துள்ளது; இன்னும் கூட, இது ஆரம்பிக்கும் போது கூட, இதற்கு வரவேற்பில்லை; முடியும் போதுதான் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் தான் உலகின் பல பகுதிகளிலும் இருந்து இங்கு வருகிறார்கள். எனவே, இந்த சமயத்தில் வந்து திறந்து வைப்பது தான் சரியான வாய்ப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து தான் முதலமைச்சர், இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.