Skip to main content

'3 மாதத்தில் 31 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினோம்' - குழந்தைகள் நலத் தலைவர்!

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

'We stopped 31 child marriages in 3 months'-regretted child welfare chief

 

தமிழ்நாட்டில் இன்று ஆசிரியர் தின விழா வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்பட்டது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடைகள் அணிவித்து புத்தகங்களை பரிசாக கொடுத்து கொண்டாடியதுடன் ஒரு கருத்தரங்கத்தையும் நடத்தினார்கள்.

 

புதுக்கோட்டை மாவட்ட நாணயவியல் கழகம் எஸ்.டி.பஷீர் அலி காலை முதல் மதியம் வரை பல நாட்டு நாணயங்கள், பணத் தாள்கள், அஞ்சல் வில்லைகளை கண்காட்சியாக வைத்திருந்தார். காசு பணத்திற்காக எல்லாரும் தேடிப் போகிறார்கள். ஆனால் நாங்கள் பலநாட்டு நாணயங்களையும் ஒரே இடத்தில் காண முடிந்தது என்றனர் மாணவ, மாணவிகள்.

 

மாலையில் நடந்த ஆசிரியர் தின கருத்தரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் சதாசிவம் மற்றும் அறிவியல் இயக்கம் அறிவொளி கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாணவிகளே தொகுத்து வழங்கினார்கள். மாணவ, மாணவிகளின் நடனம், கலை, இலக்கியம், பேச்சுகளோடு நடந்தது.

 

மாணவ, மாணவிகள் மத்தியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சதாசிவம் பேசும் போது,

 

'We stopped 31 child marriages in 3 months'-regretted child welfare chief

 

''இன்று ஆசிரியர் தினம் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். விண்ணப்பித்து பெறுவதல்ல நல்லாசிரியர் விருது. தங்களின் நல்ல வேலையை பார்த்து கொடுக்க வேண்டும். இன்று நீங்கள் ஆசிரியர்களை கௌரவித்தது போல மாணவர்கள் ஆசிரியர்களை கௌரவிப்பதே உண்மையான விருது.

 

உலகில் புனிதமான இடங்கள் இரண்டு. ஒன்று  தாயின் கருவறை. நமக்கு உயிர் கொடுக்கும் இடம். மற்றொன்று வகுப்பறை நல்ல அறிவைக் கொடுக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களை பல்வேறு பட்டப் பெயர்களை சொல்லி அழைத்து அவர்களை அவமானப்படுத்தினார்கள். இதையெல்லாம் சகிக்க முடியாத கலைஞர்  முதலமைச்சராக இருந்த போது மூன்றாம் பாலினத்தவர்களை கௌரவமாக அழைக்க வேண்டும். அவர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று '2008 ஏப்ரல் 15 திருநங்கையர் தினம்' என்று கலைஞர் அறிவித்தார்.

 

அன்று முதல் மூன்றாம் பாலினத்தவர்கள் திருநங்கைகளாக அழைக்கப்படுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் என்ற உயர்ந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். அதன் மூலம் கடந்த 3 மாதத்தில் 31 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். பொன்னமராவதி பகுதியில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கிறது. குழந்தைகள் திருமணத்தை மாணவ, மாணவிகள் தடுக்க வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் உடனே இலவச தொலைப்பேசி எண் 1098 க்கு சொல்லலாம். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் ஏற்படும் போது ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் நலக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

 

நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.