Skip to main content

பள்ளி மாணவி தற்கொலை; துக்கம் விசாரிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

villupuram avudayarpattu school girl freezer box incident 

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குமரன். இவரது மகள் கயல்விழி (வயது 17).  இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். சரியான முறையில் படிக்காமல் கயல்விழி விளையாட்டுத்தனமாக இருந்து வந்தது குறித்து அவரது தாயார் கண்டித்துள்ளார். தாய் கண்டித்ததால் கோபமடைந்த கயல்விழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மாணவி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற அவரது உறவினர்கள், ஊர் மக்கள் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ப்ரீசர் என்னும் சவப்பெட்டியில் வைத்துள்ளனர். அப்போது மாணவியின் உடலைப் பார்த்து கதறிய பெண்கள் சிலர் சவப்பெட்டியின் மீது கையை வைத்துள்ளனர். திடீரென அந்தப் பெட்டியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு பெட்டி மீது கை வைத்து அழுது கொண்டிருந்த 9 பெண்கள் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். அங்கு கூடியிருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியும் அடைந்தனர்.

 

உடனடியாக சவப்பெட்டிக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்சாரத் தாக்குதலுக்கு ஆளான பெண்களை விக்கிரவாண்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.