Skip to main content

திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Published on 01/04/2018 | Edited on 01/04/2018

 

vijayagath


 

காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வருகின்ற 06.04.2018 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில், திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரம், கீழ் வீதியில் விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார் என்று தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்