Skip to main content

ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட டி.எஸ்.பி.! மனித உரிமை ஆணையத்தை நாடிய பெண்! 

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Unilaterally DSP! The woman who sought the Human Rights Commission!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். விவசாயியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் கந்தசாமி என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்துவந்துள்ளது. இது சம்பந்தமாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ராஜமாணிக்கத்தின் விவசாய நில வரப்பை கந்தசாமி தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, அந்த நிலத்தை அளவீடு செய்து தருமாறு வருவாய்த்துறையில் முறையிட்டார். அதற்கான கட்டணத்தையும் உரிய முறையில் செலுத்தியுள்ளார். அதனடிப்படையில் நிலத்தை அளந்து சர்வே செய்யும்படி வருவாய்த் துறையிலிருந்து உத்தரவு பெற்று நில அளவீட்டையும் செய்துள்ளார். 

 

அளவீடு செய்த அதிகாரிகள், அந்த நிலம் ராஜமாணிக்கத்துக்கு சொந்தமானது என்று உறுதி செய்துள்ளனர். இதனால், ராஜமாணிக்கம், கந்தசாமி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே, கடந்த 22.4.2016ஆம் தேதியன்று தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜமாணிக்கம் நிலத்தில் பயிர் செய்திருந்த விவசாய பயிர்களை, கந்தசாமி தரப்பினர் சேதப்படுத்திவிட்டதாக கூறி ராஜமாணிக்கம் சம்பந்தப்பட்ட தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், போலீசார் அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர். அதனால், ராஜமாணிக்கம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் பதிவு தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார். 

 

அதேசமயம், ராஜமாணிக்கம் மீது கந்தசாமி தரப்பினர் கொடுத்த புகார் குறித்து அப்போதைய கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. மதிவாணனனிடம் தியாகதுருகம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆலோசனை கேட்டுள்ளார். டி.எஸ்.பி. ஆலோசனையின்படி கடந்த  23.3.2016ஆம் தேதி இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்டர், விசாரணையின் முடிவில் கந்தசாமி கொடுத்த புகாரின் அடிப்படையிலும் டி.எஸ்.பி. மதிவாணன் தூண்டுதலின்படியும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு ராஜமாணிக்கம், அவரது சகோதரி குள்ளம்மாள், அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் ராஜமாணிக்கம் மற்றும் அவரது மைத்துனர் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். அதன்பிறகு ராஜமாணிக்கம், செல்வராஜ் ஆகிய இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். 

 

இந்த நிலையில் டி.எஸ்.பி. மதிவாணன் தூண்டுதலின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஒருதலைப்பட்சமாக வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து ராஜமாணிக்கத்தின் சகோதரி குள்ளம்மாள், ‘தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 26.4.2016ஆம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், எனது தம்பி ராஜமாணிக்கம் மற்றும் கணவர் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் எதிராகவும், எனது தம்பிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடனும் கந்தசாமி தரப்பினர் செயல்பட்டனர். இதற்கு அப்போதைய கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. (தற்போது ஓய்வு பெற்றுள்ள) மதிவாணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்து கந்தசாமி தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு, எனது தம்பி ராஜமாணிக்கத்திடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொய் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். எனவே பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

 

இது சம்பந்தமான வழக்கில் கடந்த 22ஆம் தேதி மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற இறுதிகட்ட விசாரணை முடிந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. மதிவாணன் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. எனவே மேற்படி இருவரும் பாதிக்கப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.