Published on 29/01/2020 | Edited on 29/01/2020
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். என்.சி.ஆர்.பி.யில் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் இளைஞர் ஹரீஷை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட புகாரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஃபி இஸ்லாம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.