Skip to main content

கேஸ் போடுவேன்னு சொல்லி அமித்ஷாவையே மிரட்டுறதா? - டி.எஸ்.பியிடம் எகிறிய எச்.ராஜா

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

H. raja who had a dispute with the DSP

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் சக்திவேல். ஒப்பந்தப் பணிகளும் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாலைப் பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய சேர்மன் திமுக மகேஷ்வரியின் கணவர் சண்முகநாதனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து தன்னை சேர்மன் கணவர் சண்முகநாதன் தாக்கி கொல்ல முயற்சி செய்தார் என்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற்று விசாரணை செய்து வருகின்றனர். அதே போல பா.ஜ.க. நிர்வாகி சக்திவேல் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் ஒன்றிய சேர்மன் திமுக மகேஷ்வரி சண்முகநாதன் அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், பாஜக நிர்வாகி சக்திவேலை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கட்சி நிர்வாகிகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று ஒன்றிய சேர்மன் மகேஷ்வரியின் கணவர் சண்முகநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகை போராட்டத்திற்கு தயாராகி முழக்கங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு வந்த அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார் எச்.ராஜாவிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

 

அப்போது, “இருதரப்பு புகார்களுக்கும் மனு ரசீது கொடுத்தாச்சு. புலனாய்வு நடக்கிறது. நடவடிக்கை எடுக்கிறோம்” என்று டிஎஸ்பி கூறியதற்கு, “சக்திவேல் மீது கேஸ் போடக்கூடாது” என்று எச்.ராஜா மறுத்துள்ளார். “யார் புகார் கொடுத்தாலும் மனு ரசீது போடச் சொன்னது நீங்க தானே சார்” என்று டிஎஸ்பி சொல்ல, “சக்திவேல் மேல் கேஸ் போடுவேன்னு அமித்ஷாஜியையே மிரட்டுறதா?” என்று எச்.ராஜா டிஎஸ்பியிடம் கேட்க, “இதை ஏன் சார் அங்க முடிச்சு போடுறீங்க?” என்றார் டிஎஸ்பி. இதற்கு எச்.ராஜா, “அவர்தானே உங்க அமைச்சர்” என்று எகிறினார்.

 

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய போது சேர்மன் நாற்காலியில் மகேஷ்வரிக்கு பதிலாக அவரது கணவர் சண்முகநாதன் அமர்ந்து கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது பழ.சக்திவேல் மீது தாக்கி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எஸ்.பி, டிஜிபி அலுவலகம் வரை சென்று போராடுவோம் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.