Skip to main content

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட இரு சாலைகளில் செல்ல தடை! சேலம் போலீசார் நூதன உத்தி!!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்ட சேலம் மாநகர காவல்துறை, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மாநகரில் குறிப்பிட்ட இரு சாலைகள் வழியாக செல்ல தடை விதித்து, நூதன உத்தியை திங்கள் கிழமை (டிச. 16) முதல் அமல்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், காரில் செல்லும்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்வது, அபராதம் விதிப்பது என காவல்துறையினர் கெடுபிடி காட்டினர்.

two wheelers driving without helmet salem district traffic police new rules


சேலம் மாநகரில், சுந்தர் லாட்ஜ், நெத்திமேடு, அன்னதானப்பட்டி, சீலநாய்க்கன்பட்டி, வள்ளுவர் சிலை, ஆட்சியர் அலுவலக சாலை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற அடிப்படை விதியை உணர வைக்கவே காவல்துறை ஒருபுறம் தடுமாறிக் கொண்டிருந்தாலும், அபராத வசூலிலும் தீவிர கவனம் செலுத்தியது. 


இதனால் பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும், வாக்குவாதங்களும், சலசலப்புகளும் மூண்டன. காவல்துறை நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளிடையே கடும் எதிர்ப்பும், ஆதரவும் கலந்தே உள்ளது. இந்நிலையில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நூதன முறையில் ஒரு திட்டத்தை சேலம் மாநகர காவல்துறை திங்கள்கிழமை (டிச. 16) முதல் செயல்படுத்தத் தொடங்கி உள்ளது.


அதன்படி, அன்னதானப்பட்டியில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முதல் பிரபாத் திரையரங்கம் வரையிலான சாலை மற்றும் சுந்தர் லாட்ஜ் பேருந்து நிறுத்தம் முதல் மறவனேரி சாலை- செரி சாலை ஆகிய இரு சாலைகளிலும், ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் செல்ல அனுமதி உண்டு; ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள் இவ்விரு சாலைகளிலும் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதோடு, அவர்கள் வேறு பாதையில் திருப்பி விடப்படுவார்கள். ஹெல்மெட் இல்லாமல் இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கப்படாது; வழக்கும் பதிவு செய்யப்படாது. 


காவல்துறையினரின் இந்த நூதன நடவடிக்கையால் இன்று பல வாகன ஓட்டிகள், காவல்துறையின் அறிவிப்பையும் மீறி குறிப்பிட்ட சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்திய காவல்துறையினர், மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் ஞாபக மறதியாக குறிப்பிட்ட சாலையில் வந்த பலர், கொஞ்சம் அவதிக்குள்ளாகினர். என்றாலும், காவல்துறையினரின் இந்த நூதன உத்தி, பெரிய அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.