Skip to main content

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை; அதிரடியாக மடக்கிப் பிடித்த போலீசார்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

trichy thiruverumbur incident police action taken for vao petition

 

திருச்சியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை மாணவர்களுக்கு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரவி. இவருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இது குறித்து ரவி திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஒரே நாளில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு ஆசாமிகளை அவர்களின் வீடுகளில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் ஐந்து சிரஞ்சிகளை கைப்பற்றினர். விசாரணையில் கைதானவர்கள் வடக்கு காட்டூர் அண்ணா நகர் கண்ணதாசன் தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 36) மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது.

 

இந்த சம்பவத்தில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முத்து மணி (வயது 26) என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கூட்டாளிகளான இவர்கள் 3 பேரும் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரகசியமாக சப்ளை செய்து வந்துள்ளனர். கைதான 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்