Skip to main content

பல திருமணங்கள்... கோடிகளில் மோசடி.. திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இளைஞர்கள் புகார் 

Published on 18/09/2022 | Edited on 18/09/2022

 

transgender cheated case register trichy SP Complaint

 

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இளைஞர்கள் சிலர், திருநங்கை ஒருவர் தங்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக புகார் அளித்தனர்.

 

திருநங்கை ரோஸ் என்ற பபிதா ரோஸ், கடந்த 2007ஆம் ஆண்டு தனது குடும்பத்தை பிரிந்து உடுமலைக்கு வந்தார். அங்கு திருநங்கைகளுடன் சேர்ந்து வாழ்ந்துவந்தார். பின் அவர், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை ஒருவர் பின் ஒருவராக திருமணம் செய்திருக்கிறார். அந்த இளைஞர்களிடம் தனது பெயர் ஹேமா என்றும், நாகலாந்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பபிதா ரோஸிடம் அவர்கள் இருவரும் பணம், நகைகளை கொடுத்துள்ளனர்.

 

சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையில் அவர்களிடத்திலிருந்து பபிதா ரோஸ் தனியாக வந்துள்ளார். அதன்பின் அவர், தனது பெயரை ஹேமா என மாற்றிக்கொண்டு தென்காசிக்கு சென்றுள்ளார். பின் அங்கு ராமச்சந்திர பட்டினத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் பழகியுள்ளார். ராம்குமார் தென்காசியில் வட்டி தொழில் செய்துவருகிறார். அவரிடம், தான் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் சொத்து தகராறு காரணமாக குடும்பத்தினர் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

 

இவரின் கதையை கேட்ட ராம்குமார் குடும்பத்தினர், பபிதா ரோசை அவர்களது வீட்டருகே வாடகை வீட்டில் தங்க வைத்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பபிதா ரோஸ், அவர்களது குடும்பத்துடன் உறவு கொண்டாடி வந்தார். இதனிடையே அவர்களிடம் 1 லட்ச ரூபாய், 2 லட்சம் ரூபாய் என வட்டிக்கு வாங்கி அதனை முறையாக வட்டியுடன் செலுத்தி வந்தார். அப்போது, தான் வீட்டுமனையொன்று வாங்கியுள்ளதாகவும் அதனை கிரையம் செய்ய 60 லட்சம் பணம்  தருமாறு கேட்கவே ராம்குமார் 60 லட்ச ரூபாயை பபிதா ரோசிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பபிதா ரோஸ் அங்கிருந்து தப்பியுள்ளார். 

 

அங்கிருந்து திருச்சிக்கு வந்த பபிதா, திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற மூதாட்டிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, 38 லட்ச ரூபாய்க்கு விலை பேசி 28 லட்ச ரூபாயை முன்பணமாக வழங்கினார். பத்திரப்பதிவு செய்த பிறகு  மீதமுள்ள 10 லட்ச ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டார். பபிதா ரோஸ் ஆசை வார்த்தைகள் கூறி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து, திருமணங்கள் செய்து இதுவரை 50க்கும் அதிகமானவர்களை ஏமாற்றியுள்ளார். ஏமாற்றப்பட்டவர்களின் 4 பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பபிதா ரோஸ், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், தஞ்சை, தர்மபுரி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கம் ஏமாற்றியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

பாதிக்கப்பட்டவர்கள், ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். இது குறித்து பேசிய பாதிக்கப்பட்டோர் ஏமாற்றிய பபிதா ரோஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் இருந்து பணம், நகைகளை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.