Published on 08/09/2020 | Edited on 08/09/2020
![tiruvannamalai district sathanur dam water open cm palanisamy order](http://image.nakkheeran.in/cdn/farfuture/7MgLTUVxmNtyq1Ww4vNsd0g1zgg88oHOi65CdtaOEx8/1599566173/sites/default/files/inline-images/tiruvannamalai-the-sathanur-dam-149353883868-orijgp%20%281%29.jpg)
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து (09/09/2020) முதல் 6 தினங்களுக்கு 264.38 மி.க.அடி நீரினை குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், விழுப்புரம் மாவட்டம் குடிநீர் வசதி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.