Skip to main content

'சாத்தான்குளம் இரட்டைக் கொலை'- 10 போலீசார் அரெஸ்ட்... அடுத்த குறி யார்? களமிறங்கும் சி.பி.ஐ!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

thoothukudi sathankulam issues police cbcid

 

தேசத்தையே உலுக்கிய, சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடியில் நடந்தேறிய தந்தை- மகன் இரட்டைப் படுகொலையில் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை, ஐ.ஜி. சங்கர் தலைமையில் வேகமெடுத்திருக்கிறது. கடந்த ஒருவாரமாக தூத்துக்குடி மாவட்டத்திலேயே மையம் கொண்ட ஐ.ஜி தன் பணிகளை விரைவுபடுத்தியுள்ளார்.

 

தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவலர்களால் கடுமையாகச் சித்ரவதைச் செய்யப்பட்டது முதல் கோவில்பட்டி சப் ஜெயிலில் மரணமடைந்தது வரை, வழியோரம் நடந்தவைகளை சாட்சிகள், மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்களின் வாயிலாகவும் சி.பி.சி.ஐ.டி. டீம் திரட்டியிருக்கிறது.

 

thoothukudi sathankulam issues police cbcid

 

அதனடிப்படையில் ஆரம்பத்தில் 302 பிரிவான கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் காவலர்கள் குமார், முத்துராஜ் என 5 பேர் வளைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணையில் விட்டுப் பிடிக்கப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, காவலர்கள் தாமஸ், சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து உள்ளிட்ட 5 பேரை நேற்றிரவு (08/07/2020) கைது செய்த சி.பி.சி.ஐ.டி அவர்களை ரிமாண்ட் செய்து பேரூரணி சிறையிலடைத்தால் பிரச்சினை நிச்சயம். பழைய கைதிகளுக்கு ஏற்பட்ட கதி இவர்களுக்கு வரலாம் என்பதால், செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, மூவரையும் மதுரை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர். எஸ்.ஐ. பால்துரை, தாமஸ் இருவருக்கும் உடல் நலன் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

மேலும் ஜெயராஜும், மகன் பென்னிக்சும் போலீசாரால் தாக்கப்பட்ட நேரத்தில் கொடூரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் எஸ்.ஐ.க்கள் போலீஸ் மற்றும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என மொத்தம் 14 பேர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களில் காவலர்கள் 10 பேரும் கைது வளையத்தில். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி.யினர். ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அனைவரையும் விசாரித்துள்ளனர்.

 

thoothukudi sathankulam issues police cbcid

 

இதனிடையே சாத்தான்குளம் சம்பவம் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால் ஆரம்பத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்தது. கொலைத் தடயங்களை அழித்தல் என இரண்டு வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ.யின் விசாரணை மீதமுள்ளவர்களின் மீதும் பாயலாம் என்பதே தற்போதைய க்ளைமேட்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.