Skip to main content

பகலில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் திருடர்கள்...கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

தமிழகத்தில் வழிபறி, வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கும், குற்ற சம்பவங்கள் பட்ட பகலிலேயே அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் கடைவீதி அருகே குமுதா என்பவரது வீட்டில் மகன் ராஜ்குமார் மற்றும்  மருமகள் ஆர்த்தி வசித்து வருகின்றனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


இந்நிலையில் ஆர்த்தி பிரசவத்திற்காக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த தகவலை தெரிந்து கொண்ட திருடர்கள் காலையிலேயே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிலிருந்த 15 பவுன் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆர்த்தியின் குடும்பத்தினர் கொரடாச்சேரி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


இந்த பகுதியில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் புதியது இல்லையாம், தேவர்கண்டநல்லூர், குளிக்கரை, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


தேவர்கண்டநல்லூர் பகுதியில் கொள்ளை நடந்த, அதேநாளில் பட்டப்பகலில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் மனோகரன் தனது வளர்ப்பு மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 50 பவுன் நகையையும், 20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து அக்கிராமத்தினர் கூறுகையில் "குழந்தையில்லாத குறையைப்போக்கவும், ஆதரவற்ற பிள்ளைக்கொரு நல்ல வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்றும் ஆதரவற்ற பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து நல்ல வரன் பார்த்து திருமண ஏற்பாடும் செய்தனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police



அவர்களுக்கு கள்நெஞ்சம் உள்ளவர்கள் இப்படி செய்து முடக்கி வைத்துவிட்டனர். இதை காவல்துறை உடனே கண்டுபிடித்து கொடுக்கனும்," என்றனர் அக்கிராமத்தினர். இந்த பகுதிகளில் நிகழும் கொள்ளை சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தவும், திருடர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யவும், கொள்ளை போன நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர் அப்பகுதிமக்கள். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.