Skip to main content

பாஜக, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் ரஜினி? : இதுவும் ஒரு சான்று- திருமா பேட்டி

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

பாஜக அறிக்கையை ரஜினி பாராட்டுவது வியப்பில்லை  திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

mm

 

இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜகவின் அறிக்கையில் நதிநீர் இணைப்பு பற்றிய வாக்குறுதி மகிழ்ச்சியளிப்பதாகவும், தேர்ந்தலுக்கு பின் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதன் முதலில் நதி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்.

 

பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினகாந்த் பாராட்டியதில் ஆச்சரியமோ வியப்போ  இல்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் ரஜினி இயங்குகிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ரஜினியின் நிலைப்பாடு மக்களிடையே வெளிப்பட்டதில் மகிழ்ச்சிதான் என திருமாவளவன் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்