Skip to main content

அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

உலகின் பல நாடுகளில், இலட்சக்கணக்கான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி பிழைப்புக்காக பல வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கரோனா முடக்கம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.

விமான போக்குவரத்தும்  தடை விதித்துள்ளதால் நாடு திரும்பவும் அவர்களால் முடியவில்லை. எனவே வேலையின்றி, சம்பளமின்றி, உணவுக்கும் வழியின்றி அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து பல மாதங்களாக, பல வேளைகளில் பட்டினி கிடக்கின்றனர்.

இந்நிலையில் அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும்,  வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி நலவாரியமும், தனி அமைச்சகமும் உடனே அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம்  சார்பில் பல்வேறு நாடுகளில் நேற்று இணைய வழியாகவும், அவரவர் இருக்கின்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்துதல் பேரில் அக்கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தமிழ் அமைப்புகள் இணைய வழியாகவும், அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அவரது இல்லத்திலுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில், முக்கிய நிர்வாகிகள் பதாகையேந்தி, சமூக இடைவெளி கடைபிடித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “சில வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற தமிழர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவம் பார்ப்பதில்லை. மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில்லை. நெருக்கடியான அறைகளில் அடைந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் உயிர் பயத்துடன் நாள்களை கடத்தி வருகின்றனர். இதனால் அயல்நாடுகளில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்துடன் இருக்கின்றனர்.

 

 Tamils ​​should be brought to Tamil Nadu immediately - TVK leader Velmurugan demands!

 

அயல்நாடுகளில் இருந்து கேரளத்திற்கு வருகின்ற விமானங்களில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என கேரள மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டுக்கு விமானங்கள் வேண்டாம் என தமிழ்நாடு அரசு தடைவிதித்து விட்டது. இதனால் அயல்நாடு வாழ் தமிழர்கள் தாங்க முடியாத வேதனை அடைந்துள்ளனர்.  எனவே அயல்நாடு வாழ் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உடனே விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.  மேலும் நெருக்கடி காலத்தில் அவர்களை கட்டணம் இன்றி அழைத்து வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அவர்களுக்கான குவாரண்டைன் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இவைகளை செயல்படுத்த உடனடியாக அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க, தமிழக அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், வெளிநாடு வாழ் தமிழர்களை காக்க தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் அவரவர் இல்லங்களில் இருந்தபடி போராட்டம் நடத்தினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.