Skip to main content

'தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

tamilnadu rains regional meteorological centre in chennai


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

தமிழக உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

tamilnadu rains regional meteorological centre in chennai

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

அதிகபட்சமாக திருச்சி வாத்தலையில் 14, தேவாலா, செய்யாறு, சமயபுரத்தில் 11. செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளிலும், தென் தமிழக கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் அந்த கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்