Published on 22/11/2020 | Edited on 22/11/2020

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜெயச்சந்திரன் தலைமையில் தொடங்கியது.
சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 1,303 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று (22/11/2020) மாலை 04.00 மணி வரை தேர்தல் நடக்கிறது. டி.ராஜேந்தர்- தேனாண்டாள் முரளி தலைமையில் இரண்டு அணிகள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் களத்தில் உள்ளன. திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நாளை (23/11/2020) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.