Skip to main content

கோவிலில் அனைத்து நாட்களிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கோரி போராட்டம்- பாஜக அண்ணாமலை அறிவிப்பு!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

dmk

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்.31 ஆம் தேதி வரை நீட்டித்துக் கடந்த செப்.29 ஆம் தேதி தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

 

அந்த அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி. திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதி. நவம்பர் 1 ஆம் தேதிமுதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் இடம்பெற்றிருந்தது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழா, குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

 Struggle to allow darshan in the temple all day- BJP announces Annamalai!

 

இதனையடுத்து தமிழக பாஜக அண்ணாமலை ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தடைவிதிக்கக் கூடாது. பள்ளி, கல்லூரி என அனைத்திற்கும் வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதைப் போன்று கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடைவிதிக்காமல் கட்டுப்பாடுகளை விதித்து அனுமதிக்க வேண்டும் என்று கூறிவந்தார்.

 

இந்நிலையில் முக்கிய கோவில்களில் வாரம் 7 நாட்களும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, திரையரங்கு, பேருந்து சேவைக்கெல்லாம் அனுமதி தரும்போது வழிபாட்டிற்குத் தடைவிதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, அனைத்து நாட்களிலும் பக்தர்களைக் கோவிலில் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் அக்.7 ஆம் தேதி பாஜக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்