Skip to main content

மாநில எல்லை மூடல்... தமிழக - கேரள போலீசார் வாக்குவாதம்

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கொடூர கரோனாவின் தாக்கம் கூடுதலாகலாம் என்பதால் பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக தமிழகத்தின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மூன்று மாநிலங்களின் எல்லைகள் மார்ச் 31 வரை மூடப்பட்டன.
 

பயணிகளின் நலன் பொருட்டு அந்தந்த மாநிலங்களிலிருந்து குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். பால், காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள், போன்ற அத்யாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்குத் தடையில்லை. இவைகள் தவிர்த்து இதர போக்குவரத்து வாகனங்கள் சென்று வர தடை என்று அரசு மார்ச் 21 அன்று அறிவித்த மறுகணமே தமிழகத்தின் எல்லைப்புறங்கள் மூடப்பட்டன. காரணம் கொரோனாவின் தாக்கம் கேரளாவில் கூடுதலான ரேஞ்சுக்குப் போனதுதான்.

 

 border



தடைகள் உடனடி நடைமுறைக்கு வந்ததால், குறிப்பாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை செக்போஸ்டில் கேரளாவிலிருந்து வருகிற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. எல்லைப் புறத்திற்கு போலீஸ் படையுடன் வந்த தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், அத்யாவசியப் பொருட்களின் வாகனங்களை மட்டுமே கேரளாவிற்கு அனுப்பி வைத்தவர், கேரளாவிலிருந்து வந்த இதர வாகனங்களைத் திருப்பி அனுப்ப, அந்த வாகனங்கள் கேரளாவின் எல்லையான ஆரியங்காவு கோட்டைவாசல் வந்த போது நெருக்கடியானது. அத்துடன் அந்தப் பகுதியில் கயிறு கட்டித் தடுப்புகளை ஏற்படுத்திய தமிழக போலீசார் கேரளாவிலிருந்து டூவீலரில் வந்தவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கேரள ஆரியங்காவு பகுதி பதற்றத்துடன் பரபரப்பானது. போலீஸ் மைக் மூலம் வந்த தகவலால் அந்தப் பகுதிக்கு விரைந்திருக்கிறார் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்.
 

கூட்டம் அதிகமாகிப் ப்ளாக் ஆன நிலையில் அங்கு வந்த கேரளாவின் பார்டர் பகுதி ஆரியங்காவு பஞ். தலைவரான பிரதீப், டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணனிடம் போய், பைக்கில் வந்தவர்களை தமிழகத்திற்கள் போக அனுமதியுங்கள் என்று சொல்ல.
 

கடுப்பான டி.எஸ்.பி, கரோனா பிரச்சனை உத்தரவு. நீ யார்ய்யா அவங்கள அனுமதிக்க சொல்றது என்றதும்
 

நான் இங்த ஊர் பஞ். தலைவர். மக்கள் ரெப்ரஷன்டேட்டிவ். நான் சொல்லாம, பின்னே யார் பேசுவா. முதல்ல அவங்கள அனுமதியுங்க என்று பிரதீப் குரலை உயர்ந்த, வாக்குவாதம் மூண்டது. பின்பு அவரை அடக்கிய டி.எஸ்.பி.
 

மறுத்துவிட்டு.. மொதல்ல நீ, எடத்தக் காலிபண்ணிட்டுப் போ.. என்று அவரைப் போலீஸ் உதவியுடன் அப்புறப்படுத்தியிருக்கிறார்.
 

எல்லைப் புறமான கேரளாவின் தென்மலை எஸ்.எஸ்.ஐ மணிகண்டன் போலீஸ் படையுடன் ஸ்பாட்டுக்கு வந்தவர் ஸ்பாட்டிலிருப்பது தமிழகத்தின் டி.எஸ்.பி. எஸ்.ஐ.க்கும் மேலான உயர் அதிகாரி என்று தெரிந்தும், இயல்பாக கீழ் அதிகாரி, உயர் போலீஸ் அதிகாரிக்குத் தரவேண்டிய மரியாதையைத் தராத எஸ்.எஸ்.ஐ. யான மணிகண்டன் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணனுக்கு முறைப்படி சல்யூட் செய்யாமல், வந்த வேகத்தில்.

 

நீங்கள் எப்படி எங்கள் எல்லைக்குள் வரலாம் என்று கத்தியிருக்கிறார். அவரோடு அந்தப் பகுதியினரும் சேர்ந்து கூச்சலிட்டனர்.
 

தொடர்ந்து முன்னேறிய எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன், தமிழக போலீஸ் கட்டியிருந்த தடைக் கயிற்றை அகற்றி டூவீலரில் வந்தவர்களை தமிழகம் செல்ல அனுமதித்த போது பதைபதைப்போடு மறித்த டி.எஸ்.பி. அவர்களுக்குக் கரோனா தொற்று உள்ளதா, சோதனையிட உத்தரவு. அவர்களை அனுமதிக்க மாட்டேன் என்று தடுத்திருக்கிறார்.
 

நீங்கள் அனுமதிக்கலைன்னா, தமிழகத்திலிருந்து. நீங்க அனுப்பிச்ச வண்டிகளைத் திருப்பி அனுப்புவேன். என எஸ்.எஸ்.ஐ. தன் தெனாவெட்டைக் காட்டினார்.
 

அப்படி நீ திருப்புன, ஒங்களுக்குச் சாப்புடுவதற்கு தமிழ்நாட்டிலருந்துதான காய்கறிக வரணும். அத நா நிப்பாட்டிட்டா. நீங்க பட்டினி கெடக்கனும். யோசிச்சுப் பார்யா. என்று டி.எஸ்.பி, எஸ்.எஸ்.ஐ.யை அதட்ட..
 

நிப்பாட்டிப் பாருங்க என்று, பதிலுக்குக் குரலை உயர்த்தி சேலன்ஜ் செய்திருக்கிறார் எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன்.
 

இருமாநில போலீசார் மற்றும் மக்களின் டென்ஷன் பற்றிய தகவல், அவரவர் மாநில உயரதிகாரிகளுக்குப் பறக்க, பின்னரே அவர்களுக்கானத் தகவல் போலீஸ் மைக்கில் பறந்தது.
 

இறுதியாக கேரள போலீஸ் படையிடம் வார்னிங்காகப் பேசிய டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்.
 

அரசு உத்தரவுப்படிதான் செயல்பட வேண்டும். எந்த விதமான வகைகளை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் மீறினால் அது இரண்டு மாநிலப் பிரச்சனையாகிவிடும் என்று எச்சரித்த பிறகே, கேரள எஸ்.எஸ்.ஐ மணிகண்டனின் போலீஸ் படை பின்வாங்கியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.