Skip to main content

தொடங்கியது மின்வெட்டு... தூக்கமின்றி தவிக்கும் மக்கள்!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

கோடை வெயில் சுட்டெரிக்கிறது. ஃபானி புயலுக்கு தமிழக கடல் காற்று சென்றதால் மேலும் வெயிலின தாக்கம் அதிகரித்து பகலில் அனல் கக்குகிறது. இந்த நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு வேறு மக்களை வாட்டி வதைக்கிறது.

 

கடந்த சில நாட்களில் புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, திருமயம் என்று மாவட்டம் முழுவதும் இரவு 9.45 மணிக்கு தீடீரென ஏற்பட்ட மின்வெட்டு சில இடங்களில் அரை மணி நேரத்தில் வந்தது. பல இடங்களில் ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது. பகலிலும் இதேநிலை தான். அதனால்  குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் முதிவர்கள் யாரும் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். கொசுக் கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

     

power

 

மின்வாரிய அதிகாரிகளோ.. வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மின்சாரம் முழுமையாக வருவதில்லை. உற்பத்தியும் குறைவாக உள்ளது. ஏ சி பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதனால் மின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் போதிய அளவு மின்சாரம் கிடைக்காததால் மின் தடை ஏற்படுகிறது. மும்முனை மின்சாரமும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போது  அரைமணி நேரமாக தொடங்கியுள்ள மின்வெட்டு இனிமேல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தடை ஏற்படலாம் என்றனர்.

 

அறிவிக்கப்படாத மின்வெட்டால் தமிழகம் விழித்துக் கொண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அழுகிய நிலையில் இரு சடலம் மீட்பு; இ.பி மீது பொதுமக்கள் கொந்தளிப்பு

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Two farmers passed away in Tenkasi electrocution

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சண்முகவேல் மற்றும் குருசாமி இருவரும் சகோதர வழி உறவினர்கள். இருவருக்கும் கிராமத்தின் வெளியே தனித்தனியாக ஒன்று மற்றும் ஒன்றரை ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதில் கடந்த 5ம் தேதியன்று தான் செய்த விவசாய மகசூலைப் பார்க்கச் சென்றிருக்கிறார் சண்முகவேல். வயலை சுற்றிப்பார்த்து வந்த சண்முகவேல் எதிர்பாராத வகையில் வயலில் அறுந்த கிடந்த ஹெவி மின் வயரைக் கவனிக்காமல் மிதித்திருக்கிறார். இதில் ஹெவி வோல்டேஜ் மின்சாரம் தாக்கிய சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருக்கிறார்.

சண்முகவேல் வீட்டுக்கு வராததை அறிந்த அவரது உறவினர்கள் குருசாமியிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 6ம் தேதியன்று மதியம் வயல் பகுதிக்கு சென்ற குருசாமி, அங்கே சண்முகவேலைத் தேடியிருக்கிறார். அவர் குப்புறக் கிடந்ததைக் கண்டு பதறியவர் அவரைத் தட்டி எழுப்ப முயற்சித்துள்ளார் குருசாமி. இதில் பக்கத்தில் கிடந்த ஹெவி மின்வயர் பட்டதால் மின்சாரம் தாக்கி அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.

Two farmers passed away in Tenkasi electrocution

இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வயல்காரரான குமார் தன் வயலுக்குச் சென்றபோது அங்கே அடுத்தடுத்து மின்சாரம் தாக்கப்பட்டு சண்முகவேலும், குருசாமி இருவரும் உயிரிழந்துகிடப்பது தெரியவரவே உடனே புளியங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதையடுத்து சம்பவ இடம் விரைந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் எஸ்.ஐ.சஞ்சய்காந்தி உள்ளிட்ட போலீசார் அழுகிய நிலையில் கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்த, ஊருக்குள்ளோ இந்த சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி ஊர்மக்கள் திரண்டிருக்கிறார்கள். ‘வயல்வெளி பகுதிகளில் செல்லும் அதீக அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மறுநொடியே அது தொடர்பான டிரான்ஸ்ஃபார்மரின் அந்த வழி மின் இணைப்பிற்கான ஃபியூஸ் தானாகவே கட்டாகி மின்இணைப்பு துண்டித்து விடுகிற வகையில் தானே செட் செய்வது வழக்கம். அப்படியிருக்க இந்த மின்வயர் அறுந்த உடனே ஏன் மின் இணைப்பு கட்ஆகல. முறைப்படி செய்யப்பட்டிருந்தா விலை மதிப்புள்ள இரண்டு விவசாயிகளின் உயிர் பலியாகி இருக்குமா. இதுக்கு இ.பி. பதில் சொல்லணும்.

உயிரிழந்தவர்களில் சண்முகவேலுக்கு மனைவியும் 2 பெண்பிள்ளைகளும், குருசாமிக்கு மனைவியும் 3 பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு போதிய நிவாராண உதவியோட ரெண்டு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கவேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம்’ என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதையடுத்து, மின்வாரியத் துறை பலியான இரண்டு குடும்பங்களுக்கும் தலா மூன்று லட்சம் என 6 லட்சம் இழப்பீடு அளித்திருக்கிறது. அதிகாரிகளின் உறுதியளித்ததைத் தொடர்ந்து உடல்களை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Next Story

தோட்டத்தில் விவசாயிக்கு நேர்ந்த துயரம்; சோகத்தில் கிராமம்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Farmer passed away by electric shock in garden

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் கொலைகாரன் குடியிருப்பு பழனியாண்டி மகன் சக்திவேல்(50). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 

 

தினசரி தனது வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளின் சாணங்களைச் சேகரித்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் இருக்கும் தனது தோட்டத்திற்குக் கொண்டு சென்றபோது, நேற்று இரவு காற்றுடன் மழை பெய்தது. அப்போது தோட்டத்தின் வழியாக மரங்களுக்கு இடையில் சென்ற மின் கம்பிகளில் ஒரு மின் கம்பி அறுந்து கிடந்துள்ளதைக் கவனிக்காமல் சென்று, மின் கம்பியை மிதித்த விவசாயி சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்தது. அதனால் துடிதுடித்துக் கிடந்தவரை அந்தப்பக்கம் வந்தவர்கள் மீட்டுப் பேராவூரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

 

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். தோட்டத்திற்குச் சென்ற விவசாயி பலியான சம்பவம் அணவயல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வடகாடு போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர்.