Skip to main content

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை - ஆ.ராசாவுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
book


ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலுக்கு ஏற்றவாறு ஆ.ராசா புத்தக வெளியீட்டு விழாவை நடத்துகிறார் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆ.ராசாவை பாராட்டினார்.

மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தி.மு.கவின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்துவந்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை கடந்த டிசம்பர் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில் 2ஜி அவிழும் உண்மைகள் என்ற நூலை திமுக முன்னாள் அமைச்சரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான ஆ.ராசா எழுதியிருந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற 2ஜி அவிழும் உண்மைகள் புத்தகம் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலுக்கு ஏற்றவாறு ஆ.ராசா புத்தக வெளியீட்டு விழாவை நடத்துகிறார்.

2ஜி வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு தி.முக.விற்கு கிடைத்த மிக வெற்றியாகும். தி.மு.க மீது உள்நோக்கம் கற்பிக்கும் நோக்கோடு 2ஜி வழக்கு புனையப்பட்டது என கூறினார். இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன், இந்து குழுத்தின் தலைவர் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்