Skip to main content

“பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்..” - ஹரிணி ராம்சங்கர்

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

"Special classes should be conducted." - Harini Ramshankar

 

கட்டுரை: சட்டக்கல்லூரி மாணவி ஹரிணி ராம்சங்கர்

 

கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த மாணவி பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி அம்மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால், மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகிய இருவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சட்டக்கல்லூரி மாணவி ஹரிணி ராம்சங்கர், ‘பாலியல் தொல்லையால் கோவை பள்ளி மாணவி தற்கொலை. “யாரையும் சும்மா விடக்கூடாது” யார் காரணம்? இன்னும் எத்தனை? என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். 

 

அவர் எழுதிய கட்டுரை, (சட்டக் கல்லூரி மாணவியின் ஒரு சிறு கட்டுரை ஆய்வுகளுடன்) இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்மயா வித்யாலயா ஆர்.எஸ். புரம், பள்ளியில் பயின்று வந்த 11ஆம் வகுப்பு மாணவி, தனது பள்ளி ஆசிரியர் மற்றும் சில கொடூர ஆண்களின் பாலியல் தொல்லைகளால் தற்கொலை செய்து கொண்டதாக (Suicide note) தற்கொலை கடிதத்தில் எழுதி விட்டு ஒரு ஆடியோ பதிவும் பேசிவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டதற்குக் கீழ்க்கண்ட கொடியவர்களே! காரணம் எனச் சொல்கிறது அந்த குழந்தையின் கீழ்க்கண்ட கண்ணீர் வரிகள்.

 

யாரையும் சும்மா விடக்கூடாது

தனது தோழியின் தாத்தா 
மற்றோரு தோழியின் தந்தை 
தனது இயற்பியல் ஆசிரியர் 

யாரையும் சும்மா விடக்கூடாது


என மூவரைப் பற்றி அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். 

 

மேற்கண்ட வரிகளில் இரண்டு முறை ‘யாரையும் சும்மா விடக் கூடாது’ என மூன்று நபர்களை குறிப்பிடுகிறாள் அந்தக் குழந்தை.

 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியதில் கடைசியில் உள்ள 'தெய்வம்' கைவிட்டதால், அந்த மாணவியின் தந்தை போன்றவரான தனது பள்ளித் தோழியின் தந்தை ஒருவரும், தாத்தாவும், குருவான பள்ளி ஆசிரியர் ஒருவரும் தான் தனது இறப்பிற்குக் காரணம் எனத் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த தங்கக் குழந்தையை நாமும், நமது சமூகமும், நமது அரசாங்க சட்டங்களும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டது.

 

இது தற்கொலை அல்ல ஒரு கொலை. இதற்குக் காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கபட வேண்டும். என்ன சொல்கிறது நமது நாட்டின் சட்டங்களும், வெளிநாட்டின் சட்டங்களும் ஒரு சிறு பார்வை;

 

நம் நாட்டின் தேசிய குற்றப் பதிவு பணியகம் (NCRB) (National Crime Record Bureau)

 

தனது 2017- 2018 ஆய்வில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாகவும், 109 குழந்தைகள் ஒரு நாளைக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுவதாகவும் நமது இந்திய அரசின் (NCRB) எனப்படும் ஆவண பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இது அரசிற்கு தெரிந்த எண்ணிக்கை. தெரியாமல் எத்தனையோ?

 

சட்டங்களும் தண்டனைகளும்:

 

இந்தியா:
 

2013ஆம் ஆண்டு தில்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கிற்குப் பின்னர் 7 ஆண்டு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த தண்டனையைப் பெற பல ஆண்டுகள் நீதிமன்ற  போராட்டம் நடத்த வேண்டும் என்பதே நமது நாட்டில் சட்டம்.

 

சீனா:
 

குற்றவாளிக்கு உடனடியாக தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

 

சவுதி அரேபியா:
 

குற்றவாளிகளின் தலைகள் ஒரே நாளில் பொது இடத்தில் பொது மக்கள் முன்னிலையில் துண்டிக்கப்படும்.

 

வட கொரியா:

உடனடியாக நாட்டின் ஜனாதிபதி உத்தரவின் பெயரில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவர்.

ஆப்கானிஸ்தான்:
 

தலையில் சுடப்பட்டோ, தூக்கு கயிற்றில் ஏற்றப்பட்டோ, நான்கு நாட்களில் கொல்லப்படுவர்.

 

ஈரான்:
 

தூக்கில் இடப்பட்டு உடனடியாக கொல்லப்படுவர்.

 

எகிப்து:
 

தூக்கில் இடப்பட்டு உடனடியாக கொல்லப்படுவர்.

 

இப்படிப்பட்ட உடனடி தண்டனைகள் பல்வேறு நாடுகளில் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லைகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் பாலியல் தொல்லைக்கு தூக்குத் தண்டனைகள் வழங்குவது நடைமுறையில் மிக மிகக் குறைவு. மேலும், பள்ளிக் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கூட தொலைபேசி மற்றும் காணொளிகள் வாயிலாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதற்கான தனிப்பட்ட வழிமுறைகளோ, சட்டங்களோ இன்று வரை இல்லை.


‘விசாகா’ வழிமுறைகள் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும், போக்சோ சட்டங்கள் குழந்தைகளை பாழ்படுத்தும் நபர்களை தண்டிக்க இருந்தாலும், குறிப்பிடும்படி பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஒரு தெளிவான வழிகாட்டுதல்கள் இன்றுவரை நம் நாட்டில் இல்லை.

இது சம்பந்தமாக சமீபத்தில் நக்கீரன் ஆசிரியர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், அப்பாவி பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதைத் தடுக்கவும், அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் வழிமுறைகளை வகுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக மாவட்டந்தோறும் குழு அமைத்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஆணையிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அது வரவேற்கத்தக்கது.


இப்படிப்பட்ட சட்டங்கள் வந்துவிட்டால் குற்றங்கள் குறையும். குழந்தைகள் பாதுகாக்கப்படும், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும், பொறுப்புள்ளவர்களாக. கவனமாக இருப்பர்.

 

கோவை குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு உடனடியாக செய்யப்பட வேண்டியவை:

 

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், கொலையாளிகள் என உறுதிப்படுத்தி உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். 

 

ஒவ்வொரு முதல்வரும் தங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்டம் தோறும் நல்ல நேர்மையான அதிகாரிகளின் தலைமையில் குழுக்கள் அமைத்து இப்படிப்பட்ட வழக்குகளை உடனடியாக முடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

 

பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு குறித்துச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பொது மக்கள் இப்படிப்பட்ட பொதுவான பிரச்சனைகளைப் பத்திரிகை மூலம் தெரிந்துகொண்டு, வேதனைப்படுவதை விட்டுவிட்டு தனது குடும்பத்தில் உள்ள குழந்தைகளை, பெண்களை எப்படிப் பாதுகாப்பது என்று சொல்லித்தர வேண்டும்.

 

இனி எந்தவொரு குழந்தையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படக் கூடாது என இறைவனை வேண்டுவோம். ஒவ்வொரு ஆணும், வயது வரம்பு இன்றி இன்றே தனது தாய், சகோதரிகள் மீது சத்தியம் செய்து, ‘தான் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் பாலியல் துன்புறுத்தல் தரமாட்டேன்” என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழியை இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு நபரும் எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட உறுதிமொழி காணொளிகள், சமூக ஊடகங்களில் அனைவரும் பதிவிட வேண்டும்.

 

முதல்வர் முதல் கடைக்கோடி மனிதன் வரை இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.