Skip to main content

பாலியல் தொந்தரவு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கிறது-கவுதமி கருத்து

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
Sexual harassment is not only for women but also for males

 

பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான் என நடிகை கவுதமி கூறியுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்ட நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

 

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றது. குடும்பத்தை சேர்ந்தவர்களால் கூட தொந்தரவுகள் நடக்கின்றது போன்ற கேள்விகள் குத்திக்காட்டுவதாகவும்,மனதை புண்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. 

 

இந்த மாதிரி பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பல விதங்களில், பல சூழ்நிலைகளில், பல நபர்களால் நடக்கின்றது. எப்போதும் அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்