Skip to main content

தொடர் திருட்டால் பதறும் புதுக்கோட்டை!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி அதிக மக்கள் நடமாட்டம் உள்ள நகரிலும் கடந்த சில நாட்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அசத்தில் உள்ளனர். 
 

ஆகஸ்ட் 5 ந் தேதி திருட்டு விபரம்... 
சம்பவம் 1 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் வெளிநாடு சென்றுவிட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தூக்கிக் கொண்டிருந்த தனபாலின் மனைவி சிவகாமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை அறுத்துச் சென்றனர். 
 

serial theft in Pudukkottai

சம்பவம் 2  

அடுத்த வீடு தனபாலின் சகோதரர் ஜெயபால் வீடு. அவர்கள் சென்னையில் தங்கியுள்ளனர். அவர்களின் வீட்டு கதவு பீரோக்களை உடைத்து 22 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

 

சம்பவம் 3 

திருக்கோகர்ணம் காவல் சரகம் பழனியப்பா நகரில் பூட்டியிருந்த வீட்டில் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளை. வீட்டில் இருந்தவர்கள் வெளியூரில் இருந்ததால் பணம் பற்றிய விபரம் தெரியவில்லை. 
 

சம்பவம் 4 

கணேஷ் நகர் காவல் சரகம் நீதிமன்றம் அருகில் உள்ள டால்பின் செல்போன்கடையை உடைத்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
 

சம்பவம்  5 

பொன்னமராவதி ஒலியமங்கலம் சுப்பையா மனைவி பழனியம்மாள் (52) வெளிநாட்டில் இருக்கும் தனது மகன் அனுப்பிய பணத்தை எடுக்க புதுக்கோட்டை நகரில் உள்ள கனரா வங்கிக்கு வந்து பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோது அருகில் வந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணிடம் தான் போலிஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு ஊரே கெட்டுக்கிடக்கு, இவ்வளவு நகைகளை போட்டுக்கும் டவுன்ல நடக்கலாமா? கழட்டி உள்ளே வையும்மா என்று சொன்னதுடன் அந்த நகைகளை தானே காகிதத்தில் மடித்துக் கொடுப்பது பொல மடித்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். சிறிது நேரத்தில் சந்தேகத்துடன் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தால் 18 பவுன் நகைகளை காணவில்லை.

serial theft in Pudukkottai


இப்படி ஒரே நாளில் 5 சம்பவங்கள் அதில் நகரில் மட்டும் 3 சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் இன்று
 

புதுக்கோட்டை வடக்கு 3 ம் வீதியில் கலாவதி என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகை, வெள்ளி 800 கிராம், ஆகியவை திருடப்பட்டுள்ளது. அதேபோல பொன்னமராவதிலியில் இருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் வந்து இறங்கிய பெண் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்று பரவலாக பேச்சு அடிபட்டது.

இப்படி அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் புதுக்கோட்டை நகரில் வழிப்பறிகள் நடந்து காவல்நிலையத்திற்கு சென்றால் உடனே வழக்குபதிவு செய்யாமல் விரைவில் நகைகளை மீட்டு உங்களிடம் ஒப்படைக்கிறோம் புகார் வேண்டாம் என்று தவிர்ப்பது பல வருடங்களாக தொடர்கிறது. நிலைய அதிகாரிகள் மாறிய பிறகு நகை திருடன்கள் பிடிபட்டு நகைகள் மீட்கப்படும் போது பறிகொடுத்தவர்கள் போய் கேட்டால் உங்க புகார் இங்கே இல்லையே என்று பதில் வருவதால் புகார் கொடுத்தும் பதிவாகாத நிலையில் உள்ள பறிகொடுத்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.