
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில், மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.
பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படுகிறது. மதுரையில் கடந்த இரண்டு வரங்களாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு என வதந்தி ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் இதுதுறித்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.