Skip to main content

பென்ஷன், சலுகை வேண்டும்... உரிமைக் குரலைக் கிளப்பும் ஆர்.எஸ்.எஸ்.சின் மிசா கால சிறைவாசிகள்

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

பா.ஜ.க.வின் அடித்தளமான பரிவார் அமைப்புகளில் ஒன்றான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தாங்கள் மிசா காலத்தில் நெருக்கடி நிலையை அனுபவித்ததுடன் சிறைக் கொடுமைக்குள்ளானோம். இப்போது முதிர்ந்த வயதில் வாழ்வாதாரமின்றி துன்பப்படுகிறோம். மிசாவில் சிறை சென்ற எங்களைப் போன்ற தியாகிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று உரிமைக் குரலெழுப்புகிறார்கள்.

 

The RSS's Misa-Prisoners who rights


1974ளில் தேசத்தின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கையில் வைத்திருந்த இரும்புப் பெண்மணியான பிரதமர் இந்திரா காந்தி. 1975 ஜூன் 25ம் நாள் நடு இரவின் போது MAINTENANCE OF INTERNAL SECURITY ACT எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்பு சட்டமான, மிசா, என்கிற நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதன்படி பத்திரிகைச் சுதந்திரம் நசுக்கப்பட்டு செய்திகள் தணிக்கைக்குட்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி அல்லாத பரிவார் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். ஆனந்தமார்க் போன்ற கலாச்சார அமைப்புகள் தடை செய்யப்பட்டன. அப்போதைய ஜனசங்கம், லோக்தள் ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தொடர்ந்து லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் சத்யாகிரகப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சென்னையில் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் என்று அனைவரும் கொட்டடியில் அடைக்கப்பட்டனர். சித்ரவதைக்குட்படுத்தப்பட்டனர். காலை 10 மணி அரசு அலுவலக நேரமென்றால் 9.50க்கே நாட்டின் அனைத்து அரசு ஊழியர்களும் அவரவர் அலுவலக இடத்தில் ஆஜரானார்கள். ஏன் என்று கேட்க முடியாத நேரம். அவசர நிலை காலத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள், அப்போது இளைஞராய் இருந்த தி.மு.க.வின் ஸ்டாலின் போன்றோர் சிறைச் சித்திரவதைக்குள்ளானார்கள்.

 

The RSS's Misa-Prisoners who rights

 

சங்கரன்கோவிலில் நெருக்கடி நிலை கால ஆர்.எஸ்.எஸ். போராட்ட வீரர்கள் சங்கத்தின் தமிழ்நாடு அமைப்பின் 3வது மாநில மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் கந்த குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ஓம் சக்தி பாபு முன்னிலை வகித்தார். பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் சங்க அகில இந்திய தலைவர் கோவர்த்தன் பிரசாத் அடல், துணைத் தலைவர் ஆனந்த ராஜன், அசோக் குமார் யாதவ், கேரள மாநில தலைவர் ராதா கிருஷ்ணன், மாநில பொருளாளர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The RSS's Misa-Prisoners who rights

 

மாநாட்டில் இல. கணேசன் பேசியதாவது, மிசா காலத்தில் பல இன்னல்களை அனுபவித்த தியாகிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். ரயிலில் ஏசி கோச்சில் மிசா காலச் சிறை சென்றவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும். மிசா காலத்தில் சிறை சென்றவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறோம். மிசா காலத்தில் போராடிய தியாகிகளுக்கு உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம். சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரகாண்ட், மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், தியாகிகள் பென்சன் போக்குவரத்து சலுகை மற்றும் இலவச மருத்துவ உதவி வழங்கி வருகிறது. இது போல் தமிழக அரசும் மிசா கால தியாகிகளுக்கு சலுகைள் வழங்க வேண்டும். நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த பல கோரிக்கைகள் தற்போது நிறைவேறி வருகிறது. காஷ்மீரின் 370 சட்டப் பிரிவை நீக்கவேண்டும். முத்தலாக் தடை சட்டம், சி.ஏ.ஏ. அமலாக்கம், ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.