Skip to main content

மீத்தேன் கொண்டு செல்ல ஆற்றை தூர்த்து சாலை? ஆற்றின் கணக்கை கேட்டு தாம்பூலம் வைத்து அதிகாரிக்கு அழைப்பு கொடுத்த டிஆர்பி.ராஜா எம்எல்ஏ!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முழு விவசாய கிராமம் பேரையூர். அந்த கிராமத்தில் காலங்காலமாக காவிரித் தண்ணீர் பாய்ந்து நெல் விவசாயம் செழித்திருந்தது. ஆழ்குழாய் பாசனம் குறைவாக உள்ள பகுதி. இந்தநிலையில் கடந்த மாதம் முதல் திடீரென அந்தப் பகுதியில் அகலமான சாலை அமைக்கும் பணி நடக்கிறது. சாலைப் பணிக்காக ஆற்றை தூர்த்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 

 

Road on the river? TRP Raja MLA calling official

 

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கேட்டும் எந்த பதிலும் கிடைக்காததால் தொகுதி திமுக எம் எல் ஏ டி.ஆர்.பி.ராஜாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இன்று காலை அந்தப் பகுதிக்குச் சென்ற எம்எல்ஏ பணி விபரம் குறித்த பதாகை இல்லாமல் சில அதிகாரிகளிடம் கேட்க நபார்டு திட்டத்தில் சாலை என்று மட்டும் பதில் கூறியுள்ளனர். மேலும் நீர்வழிப்பாதையை அடைத்து சாலை அமைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு எந்த அதிகாரியும் பதில் சொல்லவில்லை. அதனால் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு ஆற்றின் அகலம் என்ன என்பதை அறிய வேண்டும் எப் எம்பி கணக்குடன் வாருங்கள் என்று அழைத்துள்ளார். ஆனால் அந்தப் பக்கமே வராத கிராம நிர்வாக அலுவலர் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கொண்டார். 3 முறை அழைத்தும் வராததால் ஆற்றின் அளவை எம்எல்ஏவே அளந்து பார்த்துவிட்டு மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்று தாம்பூலத்தில் பழம், பூ, வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்டு கிராம நிர்வாக அலுவலருக்காக நீண்ட நேரம் காத்திருந்தார்.

 

Road on the river? TRP Raja MLA calling official

 

அப்போது துணை தாசில்தார் உள்பட பலரும் எம்எல்ஏவிடம் சமாதானம் செய்தனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலரை நாளை ஆற்றை அளக்க கணக்குடன் வருமாறு தாம்பூலம் கொடுத்து நேரில் அழைக்க வேண்டும் என்று காத்திருந்தார். அதன் பிறகு உள்ளிருந்து வெளியே வந்த கிராம நிர்வாக அலுவலரிடம் தாம்பூலம் கொடுத்து நாளை காலை 10 மணிக்கு அதிகாரிகள் வருகிறார்கள அதனால நீங்களும் தவறாமல் கிராம கணக்குடன் வரவேண்டும் என்று  அழைப்புக் கொடுத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Road on the river? TRP Raja MLA calling official


 

இது குறித்து மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ  கூறும் போது.. எனது தொகுதிக்குள் விவசாயத்திற்கு தண்ணீர் பாயும் ஆற்றை தூர்த்து சாலை அமைப்பதாக கிராம மக்கள் சொன்னார்கள் வந்து பார்த்தேன். எந்த திட்டத்தில் சாலை பணி எதற்காக பணி என்ற எந்த பதாகையும் இல்லாமல் வேலை நடக்கிறது. அதனால் எனக்கு சந்தேகமாக உள்ளது. அதாவது மீத்தேன் அரக்கனை கொண்டு வந்து எங்கள் விவசாயத்தை அழித்து இயற்கை வளங்களை கொண்டு செல்ல இந்த சாலை அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. மேலும்  தண்ணீர் பாய்ந்தால் தானே விவசாயம் நடக்கும் என்பதால் திட்டமிட்டே விவசாயத்திற்கு தண்ணீர் பாயும் ஆற்றின் அளவை குறைப்பதாக நினைக்கிறேன். 

 

 

அருகில் உள்ள பாலம் 19 மீட்டர் அளவில் உள்ளது. 3 கண்களில் தண்ணீர் செல்கிறது. ஆனால் இப்போது 4 மீட்டர் அளவு கூட ஆறு இல்லை. இதனால் வெள்ள காலங்களில் பெரும் பாதிப்பு வரும் விவசாய காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை வரும். அதனால தான் ஆற்றின் அளவை காண கிராம கணக்கை எடுத்து வர கேட்டோம் கிராம நிர்வாக அலுவலர் வரவில்லை. இப்ப தாம்பூலம் வைத்து அழைத்திருக்கிறோம். நாளை நிச்சயம் வருவார் என நம்புகிறோம். எந்த சூழ்நிலையில் விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழிக்கவிடமாட்டோம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.