Skip to main content

ரேஷன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்! ஆட்சியர் கடும் எச்சரிக்கை! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

 

ration rice goondas act salem district collector



ரேஷன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார். 

 

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா அரிசியும், மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. 

 

பெரும்பாலான கார்டுதாரர்கள், ரேஷன் அரிசியை வாங்கி, அதை வெளிச்சந்தையில் கிலோ 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். அரிசி வாங்க விருப்பம் இல்லாத கார்டுதாரர்களிடம் பேசி, அவர்களின் ஒப்புதலுடன் ரேஷன் ஊழியர்களே அரிசியை வெளிச்சந்தைக்கு கடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

 

ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கும் கும்பல், அதை அரைத்து இட்லி மாவு விற்பனை செய்யும் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் கொள்ளை விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் கால்நடைத் தீவனத்திற்காக கடத்தி விற்கின்றனர். 

 

இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலை ஒடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்குற்றத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் வரை பாயும் எனவும் எச்சரித்துள்ளது. 

 

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் 1156 முழுநேர ரேஷன் கடைகளும், 445 பகுதி நேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 1601 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. சில கடைகளில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

 

அரிசி விநியோகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ, அரிசி கடத்தலுக்கு துணை போனாலோ அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 1955ன் படி, குற்றவியல் நடவடிக்கையோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். 

 

ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்குரிய அரிசியை ரேஷன் கடையில் இருந்து பெற்று வெளிச்சந்தையில் விற்பனை செய்தால், அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.