Skip to main content

வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது ! - அரசுத்தரப்பு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் !

Published on 04/04/2020 | Edited on 04/04/2020


எலெக்ட்ரானிக் இயந்திரங்கள், பதிவேடுகளை வீடு வீடாகச் எடுத்துச் செல்ல இயலாது என்பதால்,ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க முடியாது எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
 

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்,அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
 

 

ration food products supply in home facilities not chennai high court


நிதியுதவி, ரேஷன் பொருட்களைக் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு வீடியோ கால் மூலம் விசாரித்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், நிதியுதவியையும், ரேஷன் பொருட்களையும் பெற குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், தினமும் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் இவை வழங்கப்பட வேண்டும் எனவும் விரிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

ration food products supply in home facilities not chennai high court


மேலும், எலெக்ட்ரானிக் இயந்திரங்கள், பதிவேடுகளை வீடு வீடாக எடுத்துச் செல்வதென்பது இயலாத காரியம் என்பதால்,வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது எனத் தெரிவித்த அவர்,நிதியுதவியும், ரேஷன் பொருட்களும் விநியோகிக்கும் போது, சமூக விலகலைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நிதியுதவி மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் போது, சமூக விலகலைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, மனுவுக்கு ஏப்ரல் 9-ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கள்ளச்சாராயத்தை ஒழிக்க சட்டத் திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும்” - வேல்முருகன்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Govt should bring amendment to eliminate adulterated liquor says Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில்  நடந்தது. அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி செய்யும் போது கள்ளச்சாராய மரணம் தொடர்கிறது. இதைத் தடுக்க காவல் துறை, வருவாய்த் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இது தவிர கள்ளச்சாராய மரணம் நடைபெற்றால் அதற்கு அந்தந்தப் பகுதியில் உள்ள உள்ளளாட்சி பிரநிதிகள் தொடங்கி, சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர்,  மாவட்ட அமைச்சர் என அனைவரும் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்கான புதிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். இது மட்டுமின்றி காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரும் பொறுப்பேற்க வேண்டும். 

அப்போது தான் கள்ளச்சாராயம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் சமூக நீதி நிலை நாட்ட வேண்டும். இங்கு ஜாதி வாரி கணக்கெடுப்பை அரசு தொடங்க வேண்டும். இந்தியாவில், பீஹார், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அறிவிப்பு இதுவரை இல்லை. எனவே, சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கை நடந்து வருகிறது. இதில், காவல் துறையினர் மானியக்கோரியின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும்போது தகுதியுள்ளவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதுபடி முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கி சமூக நீதியை அரசு நிலை நாட்ட வேண்டும். பரந்தூர் மக்கள் வேறு மாநிலத்துக்கு குடியேறுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக  அரசு  மேற்கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு மணல்கடத்தப்படுகிறது. இதை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

‘பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை...’ - நீதிமன்றம் வேதனை

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
court anguish incident affects not only the women concerned

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாகா கமிட்டியில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற விசாரணையில் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மோகன கிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது, ‘பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும், மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் மீண்டும் விசாரித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.