Skip to main content

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் தூய்மைப் பணி; தன்னார்வலர்கள் ஆர்வம்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

trichy srirangam amma mandapam kaveri karai cleaning work volunteer involved 

 

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடன் இணைந்து காவிரி நதி தூய்மைப் பணியினை மாகாவேரி தன்னார்வக் குழு பல்வேறு சமூக சேவை அறக்கட்டளையுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காவிரிக் கரையோரத்தில் அமைந்துள்ள அம்மா மண்டப காவிரிக் கரை பராமரிப்பின்மையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். காவிரி நதி புண்ணிய நதியாக கருதப்படுவதால் பக்தர்களின் நிலையான வருகையைப் பெறுகிறது. மேலும் முன்னோர்களுக்கு செய்யும் பூஜைகளில் ஈடுபடுபவர்கள் பூ, மாலைகள், துணிகள், பழங்கள், இலைகள் மற்றும் பிற பொருட்களை ஆற்றில் விடுவது வழக்கமாக உள்ளது. பல பக்தர்கள் மாலைகள் மற்றும் துணிகளை தவறாமல் ஆற்றில் விடுகிறார்கள். முக்கியமாக ஆடைகள், கரையோரத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

 

இதனைக் கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் மாகாவேரி தன்னார்வக் குழு, திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேஷன், திருச்சி எம்.ஜி.ஆர். சாலை நடைபாதை அமைப்பு, ஆயிர வைசிய மஞ்சள் புதூர் மகாஜன சபை, சக்தி சங்கம், சிவசக்தி அகாடமி, சின்மயா பள்ளி மாணவ, மாணவிகள், ஆரிய வைசிய பேரி செட்டியார் சமூகத்தினர், ஆரிய வைசிய சமூகம், ஜில்லா நாயுடு மகாஜன சங்கம், சௌராஷ்ட்ரா சமூகத்தினர், யாதவ சமூகத்தினர், விஸ்வகர்மா சமூகத்தினர், ராதாகிருஷ்ண மாதர் பஜனை மண்டலினர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை உட்பட பல்வேறு சமூக சேவை அமைப்பு மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து திருச்சி காவேரி அம்மா மண்டப பகுதிகளையும் ஆற்றில் இருந்த மாலைகள், துணிகள், பானைகளை எடுத்து தூய்மைப்படுத்தினர்.

 

முன்னதாக சிவசக்தி அகாடமி குழுவினர் காவேரி புனிதத்தை எடுத்துக் கூறும் பாடலுக்கு நடனம் ஆடினர். பொதுமக்களிடம் காவேரி அம்மா மண்டப படித்துறையினை சுத்தமாக பராமரிக்க பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர். காவிரி தூய்மைப் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் பத்ரி நாராயணன், பத்ம கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி ஒன்றாவது மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சாதிக் பாஷா, எல்ஐசி சங்கர் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தனர்.

 

இணை ஒருங்கிணைப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், கோபிநாத், கோகுல்தாஸ், ரங்க பிரசாத், சரவணன், கார்த்திகேயன், ராஜேஷ், அன்புச்செல்வன், ரவிச்சந்திரன், சரவணன், வெங்கடகிருஷ்ணன் விக்னேஸ்வரன், சந்தன கிருஷ்ணன், கண்ணன், கார்த்திக், கிருஷ்ணகுமார், பாலமுருகன், கோபி, நந்தகுமார், வெங்கடேசன், சேக்கிழார், செந்தில், எம்ஜிஆர் நடைபாதை அமைப்பு தலைவர் ஸ்ரீனிவாசன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், முத்து மணிகண்ட கார்த்திகேயன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.