Skip to main content

"பெரியார் பேசியது அந்தக் காலம்!" - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடி!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

சென்னையிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி "அதிமுக ஆலமரம் போன்றது.  அதில் பறவைகள் போல பலர் வருவார்கள்; பலர் போவார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் திமுகவை கடுமையாக எதிர்ப்பவர்கள். கட்சியினரை திருப்திப்படுத்தவே பிரேமலதா அவ்வாறு பேசியுள்ளார்.  கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை. அனைவரையும் அரவணைத்தே அதிமுக செல்கிறது. 

 

 Rajenthra Bhalaji about Periyar

 



ஸ்டாலின் முதல்வர் ஆவதை எந்தக் கொம்பனும் தடுக்க வேண்டாம்.  திமுகவினரே தடுத்துவிடுவார்கள்.  சிறுபான்மையினர் யாரேனும் தப்பு செய்தால் அவர் குற்றவாளி இல்லை எனச் சொல்வார்கள்,  கொலையாளியே ஒப்புக்கொண்ட பிறகும்கூட. 

8 வயது சிறுமி கொடூர முறையில் கொலை செய்யப்பட்டாள். அச்சிறுமி  இந்து என்ற காரணத்திற்காக ஸ்டாலின் எதுவும் பேசவில்லை. இதேபோல் வில்சன் கொலை வழக்கில் குற்றவாளி சிறுபான்மையினர் என்பதால்,  எதுவும் பேசவில்லை. பணத்தை வாங்கிக்கொண்டு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக திமுக இருக்கிறது. திமுக விற்கு இந்துக்களின் ஓட்டு மட்டும் இனிக்கிறது. உயிர்கள் கசக்கிறது. இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் இந்து மதத்தை இழிவு செய்யும் திமுகவிற்கு சம்மட்டி அடி கொடுக்கத்  தயராகிவிட்டனர். இந்துக்களுக்கு என்ன ஆனாலும் தேர்தலின் போது பட்டையைப் போட்டு ஓட்டு கேட்பதும்,  தேர்தலுக்குப்பின் அவர்களைப்  போட்டுட்டுத்தள்ள திட்டம் போடுவதும் திமுக கூட்டணி.

 



திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது ஒருக்காலும்  நடக்காது. 80 சதவீத மக்கள் இந்துக்கள்.  இனி திமுகவிற்கு இந்து மக்களின் ஓட்டு கிடைக்காது. 120 கோடி இந்திய மக்களில் 110 கோடி பேர் இந்துக்கள். இந்து மதத்தை இழிவாகப் பேசுவோரை இந்துக்கள் தாக்கினால் தாங்குவர்களா?

இந்து மத எதிர்ப்பு கொள்கையினால்,  துரைமுருகனுக்கே தெரியும் அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று. துணை முதல்வரும், அமைச்சர் ஜெயக்குமாரும்  ரஜினியைக் கண்டித்துப் பேசவில்லை. ரஜினி பேசியது நியாயம் தான். பெரியார் பேசியது அந்தக்காலம்.  இந்தக் காலத்தில் கடவுள் இல்லை எனச் சொன்னால் கல்லால் அடிப்போம்.

 



தஞ்சை குடமுழுக்கு குறித்துப் பேச நாத்திகர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? குழந்தைகளை எல்லாம் இந்தியில் படிக்க வைத்துவிட்டு தமிழ்ப்பற்று உள்ளவர்கள் போல் நடிக்க வேண்டாம். தமிழக அரசின் கோரிக்கைகள் எல்லாம்  மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. 

நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மக்கள் தயாராக உள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். நீட்டில் இருந்து விலக்கு கிடைக்க வில்லை என விளக்கை அணைக்க முடியுமா?  நீட்டில் இருந்து விலக்கு கொடுத்தாலும்,  கொடுக்க வில்லை என்றாலும் சந்தோசமே!" என்றார் அதிரடியாக.

அமைச்சருக்கு என்னதான் ஆயிற்று? சனாதனவாதி போல் இந்தப் பேச்சு பேசுகிறாரே!

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.