Skip to main content

ஊராட்சி மன்றத் தலைவர் ஓட ஓட விரட்டி படுகொலை

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

president of the panchayat council was passed away

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியும் பாஜக நிர்வாகியுமான பி.ஜி.டி.சங்கர். இவர் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பாஜக எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநிலப் பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 

 

இந்த நிலையில் கொளத்தூரில் உள்ள தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின்பு காரில் பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து பெட்ரோல் குண்டை வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர் காரை விட்டு இறங்கி சாலையில் ஓடியுள்ளார். விடாது துரத்திய கும்பல் தொடர்ந்து அவர் மீது பெட்ரோல் குண்டை வீசியது. 

 

இந்த நிலையில் அங்கே ஏற்கனவே மறைந்திருந்த மற்றொரு கும்பல் சங்கரை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் சங்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்