Skip to main content

மினி லாரியை பிடித்த காவல் ஆய்வாளர்... பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்!!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

police inspector catched mini truck ... Superintendent of Police praised

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள டி. தேவனூர் கூட்டு ரோடு பகுதியில், அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் ராம்தாஸ், உதவி ஆய்வாளர் தங்கவேல், தனிப்பிரிவு ஆனந்தன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் பயணம் செய்த ஓட்டுநர், கூட வந்தவர்கள் இரண்டு பேர் என மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

 

சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அதில் புதினா, கொத்தமல்லி வைக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு நடுவே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏராளமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்தப் புகையிலை பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்டடுள்ளதாகவும், அதனை திருவண்ணாமலை வேட்டவலம், வீரபாண்டி, அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்குள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததையும் ஒப்புக் கொண்டனர்.

 

இதையடுத்து மினி லாரி ஓட்டுநர் பையூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் அவருடன் வந்த பார்ட்னர்களான திருக்கோவிலூர் சதீஷ், அருணாபுரத்தைச் சேர்ந்த மணிபாலன் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் 10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பார்வையிட்டார். வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ததோடு கடத்தல்காரர்களையும் கைது செய்த காவல்துறையினரை பாராட்டினார்.

 

விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்லை பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து போதை புகையிலை, மது பாட்டில்கள், கள்ளச்சாராயம், கஞ்சா பொட்டலங்கள் ஆகியவை கடத்தப்படுவது தினசரி நடைபெற்றுவருகிறது. காவல்துறையினரும் கடத்தல்காரர்கள் கடத்திவரும் அனைத்துப் போதை பொருட்களையும் பறிமுதல் செய்த வண்ணம் உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை, போதைப் பொருட்கள் கடத்துவதுபவர்களை போலீசார் கைது செய்வது தினசரி சம்பவங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.