Skip to main content

போலீசார் அபராதம் வசூல்... வழக்குப்பதிவு...! லாரி உரிமையாளர்கள் புலம்பல்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Police collect fines ... Case ...! Truck owners lament!

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, சரக்கேற்றிச் செல்லும் லாரிகளை மடக்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதால், தொழில் பாதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தனராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது; லாரி தொழில் கரோனா காலத்தில் மிகவும் சிரமத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது. தற்போது கரோனா மூன்றாவது அலையின்போதும் கூட அரசின் முறையான வழிகாட்டுதலின்படி, லாரி ஓட்டுநர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், வாகனங்களை தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கி வருகின்றனர். 

 

கரோனா ஊரடங்கு காலத்தில் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்வதற்கு அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும், நோய்த்தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஒரு சில இடங்களில் காவல்துறையினர் வாகனத்தை வழிமறித்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலிக்கின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, லாரி தொழிலுக்கும், ஓட்டுநர்களுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்குதடையின்றி கரோனா காலத்தில் லாரிகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.