Skip to main content

பிச்சாவரம் படகு சவாரி; ஏமாற்றப்படும் சுற்றுலா பயணிகள்? அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை! 

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

Pichavaram boat ride; Cheated tourists? Government demands action!

 

கோடையில் குதுகலமாக பிச்சாவரம் படகு சவாரி உள்ளதாகச் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்து செல்கிறார்கள்.

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இது சுமார் 1,100 ஹெக்டர்  பரப்பளவில் அமைந்துள்ள  உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகள் ஆகும். கடல் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்தக் காடுகளில் இயற்கை மூலிகை மரங்களான சுரபுண்ணை, தில்லை சங்குசெடி, பீஞ்சல், பூவரசு, வெண்கண்டல், சிறுகண்டல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மூலிகை தாவர செடிகள் உள்ளன. இதில் தில்லை மரம் நடராஜர் கோவிலின் தல விருச்சகமாகும். ஆகையால் இந்தப் பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், இங்குள்ள நீர்நிலைகள் படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ளதால் கடந்த 1984ஆம் ஆண்டு  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. இங்குத் தற்போது 100-க்கும் மேற்பட்ட அளவில் துடுப்பு படகுகள் மற்றும் இயந்திர படகுகள் உள்ளன. இந்தச் சுற்றுலா மையத்திற்கு அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை காலம், கோடை காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து சதுப்பு நில காடுகளில் உள்ள பந்தல்போல் அமைந்தள்ள சுரபுண்ணை மரங்கள் உள்ளிட்ட இயற்கை அரண்களை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

 

Pichavaram boat ride; Cheated tourists? Government demands action!

 

இந்நிலையில் தற்போது கோடைவிடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகிறார்கள். ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனம் மூலம் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள். இதனிடையே  திமுக அரசு பதவியேற்ற, முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பிச்சாரவம் சுற்றுலா மையம் உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சுற்றுலா மையத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். அதற்கான பணிகள் இன்று வரை தொடங்கவில்லை. அரசு அறிவித்தவாறு சுற்றுலா மையத்தை மேம்படுத்தினால் இப்பகுதி வளர்ச்சி அடைவதோடு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

 

Pichavaram boat ride; Cheated tourists? Government demands action!

 

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தைச் சேர்ந்த தேவி என்பவர் குடும்பத்துடன் படகுசாவரி செய்து மகிழ்ந்தார். பின்னர் அவர் கூறுகையில் பிச்சாவரத்தில் படகு சவாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் செய்து மகிழ்ந்து சென்றேன். தற்போது குடும்பத்துடன் படகு சவாரி செய்தோம். கடந்த முறை படகு சவாரியில் அதிக இடங்களைச் சுற்றிக் காண்பித்தார்கள். தற்போது வனத்துறை தடை செய்துள்ளது என ஒரு வாய்காலை மட்டுமே காட்டுகிறார்கள். இது புதியதாக வருபவர்களுக்குத் தெரியாது. சதுப்பு நிலகாடுகளில் உள்ள வாய்கால்களில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்குத் தரமான உணவு, தங்குமிடம் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும். படகு சவாரி செய்யும் நேரத்தைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.