Skip to main content

பொள்ளாச்சி விவகாரம்... கோவை எஸ்.பி. மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...!

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட விவகாரத்தில் கோவை எஸ்.பி. மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஏ.கே.சூரியபிராகசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

 

high court

 

ஏற்கனவே இது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் முறையிட்டிருந்தும் சரியான நடவடிக்கை எடுக்காததனால் நீதிமன்றம் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீதும், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைந்து அரசாணை வெளியிட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மீதும் ஏற்கனவே டி.ஜி.பி.யிடம் புகார் அளித்திருந்தும் அந்த புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்காததனால். தற்போது நீதிமன்றம் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை அன்று விசாரணைக்கு வருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்