Skip to main content

பெரம்பலூர் மாவட்டத்தில் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனம்

Published on 12/07/2020 | Edited on 12/07/2020
ppp

 

 

பெரம்பலூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் சுய உதவிக்குழு பெண்களிடம் மற்றும் மாவட்டத்தில் கல் குவாரிகளில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள், நடைபாதை கடை வைத்துள்ள சிறு வணிகர்கள் என பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு கடன் கொடுத்துள்ளன. 

 

ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு இல்லாததால் வருமானமும் இல்லை. நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற  சுய உதவிக்குழு பெண்கள் உட்பட அனைவரும் அவர்களிடம் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமலில் உள்ளதால் எந்த வருமானம் இன்றி தங்களது அன்றாட சாப்பாடு பிரச்சனையை தீர்ப்பது பெண்களுக்கு ஏழை எளிய மக்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது.

 

இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கடன் வாங்கியதற்கான தவணையை திருப்பி செலுத்த ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளித்துள்ளது. அப்படியிருந்தும் பெரம்பலூரில் உள்ள நிதிநிறுவனங்கள் அதில் பணி செய்யும் கடன் வசூலிக்கும் ஊழியர்கள் கடன் பெற்ற சுய உதவி குழுப்பெண்களின் வீடுகளுக்கு சென்று கடனை திருப்பி செலுத்துமாறு மிரட்டி அடாவடித்தனமாக கடன் தொகை தவணையை வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

கடன் பெற்றுள்ள பெண்கள் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எங்களிடம் இருந்து கடன் தொகையை திருப்பிச் செலுத்துமாறு மிரட்டுகிறார்கள், தரக்குறைவான வார்த்தைகளை கூறி அருவருப்பான முறையில் பேசுகிறார்கள் என பெண்கள் குற்றம் சாட்டியுள்ளளனர். 

 

ரிசர்வ் வங்கி கடன் கட்ட அவகாசம் கொடுத்துள்ள நிலையில் இந்த நிதி நிறுவனங்களில் அடாவடித்தனத்தை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா என்று தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள பொதுமக்கள் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.