Skip to main content

கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் சேவை!

Published on 01/11/2020 | Edited on 01/11/2020
kodaikanal corona update

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் உலக சுற்றுலாதளமாக இருந்து வருகிறது. இந்த கொடைக்கானலுக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்தும் அதேபோல் வெளிநாடுகளிலிருந்தும் வருடம் தோறும் கொடைக்கானல் சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

கொடைக்கானலில் முகப்பிலேயே சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வெள்ளி நீர்வீழ்ச்சி நகர் பகுதியில் ஆறு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள நட்சத்திர ஏரி, பூங்கா மற்றும் கொடைக்கானலில் இருந்து  2000 அடி கீழே உள்ள தேனி, பெரியகுளம் போன்ற நகரங்களை பார்வையிடுவதற்கும், அதில் நடந்து சென்று கொண்டே பார்ப்பதற்கும் கோக்கர்ஸ் வாக் மற்றும் தூண்பாறை பேரிஜம் ஏரி இப்படி பல்வேறு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத்தலங்கள் அமையப்பெற்றது.

இது மட்டுமல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளதால் கொடைக்கானல் நகர் மட்டுமல்லாமல் கீழ் மலை, மேல் மலை போன்ற பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மலைகளை சுற்றி ஏராளமான அணைகளும் அதேபோல் பசுமை புல்வெளிகள் அடர்ந்த வனங்களும், அதேபோல் யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, சிங்க வால் குரங்கு என பல்வேறு வகையான வன விலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ளது.

இதையெல்லாம் காண்பதற்காக தற்போது தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்று கோவையிலிருந்து வாரம் மூன்று நாட்கள் திங்கள், செவ்வாய், புதன் என மூன்று  நாட்கள் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா தலங்களையும் ஹெலிகாப்டர் மூலம் மேலே இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் பார்வையிடுவதற்கு தற்போது இன்று ஹெலிகாப்டர் சேவை முன்னோட்டம் நடை பெற்றது.

ஹெலிகாப்டர் மூலம் கோவையிலிருந்து சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணமும் திருமணம் முடிந்து தேனிலவுக்கு ஜோடிகளாக வரும் நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரிலிருந்து படம் எடுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் 6 இருக்கைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்க வாய்ப்பு உள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏலகிரி மலையில் திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
helicopter suddenly landed on the Yelagiri hills causing excitement

பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் ரத்னா ஜெயின் (50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் வைத்துள்ளார். இந்த நிலையில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துச் செல்ல பெங்களூரிலிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்துள்ளனர்.

இதன் காரணமாகத் திடீரென ஏலகிரி மலையில் டான் போஸ்கோ கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. இதனைக் காண அப்பகுதி மக்கள் கூட்டம் சேர்ந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திடமும் அல்லது மாவட்ட போலீசாரிடமும் முறையான அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கி இருந்தாலும், இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும் எனக் கல்லூரியின் முதல்வர் போஸ்கோ அகஸ்டியனிடம் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது எனவும் கல்லூரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Chandrababu Naidu's helicopter misses its way, causing excitement

இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் 175 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கும், 25 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜனஜன சக்தி கட்சியுடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு எச்சரிக்கை செய்தனர்.

இந்த எச்சரிக்கையை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு சென்று பாதுகாப்பாக தரையிறங்கியது. ஏ.டி.சி.யுடன் ஒருங்கிணைப்பு இல்லாததால் வழி தவறி வேறு திசையில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றதால் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.