Skip to main content

தாய் மகன் உயிரை குடித்த ஆன்லைன் ரம்மி சூதாட்டம்!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் விளையாட்டுக்கள் பற்றிய ப்ரோமோஷன்களை நாம் பார்த்திருப்போம். இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் விளையாடுங்கள் இவ்வளவு சம்பாரிக்கலாம். அவர் எவ்வளவு சம்பாரித்துள்ளார் பாருங்கள் என பல ஆன்லைன் கேம்கள் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆன்லைன் ரம்மி. இப்படி ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்து கடைசியில் கந்துவட்டிக்கு கடன் வாங்கி ரம்மி விளையாண்டு தோற்று இறுதியில் தற்கொலையில் முடிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

 

rummy

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி என்.எல்.புரத்தைச் சேர்ந்தவர் அருள்வேல். இவரது மனைவி திவ்யா. இருவரும் சென்னை பெரும்பாக்கத்தில் தங்கி ஐடியில் பணிபுரிந்து வந்தனர். ஐடி ஊழியரான அருள்வேல் மாதம் ஒரு லட்சம் ரூபாயும், மின் பொறியாளரான திவ்யா மாதம் 50 ஆயிரம் ரூபாயும்  சம்பளம் பெற்று வந்த நிலையில் அருள்வேல் அலுவலகத்தில் பணி நேரத்தில் ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

 

rummy

 

ஆரம்பத்தில் ரம்மி சூதாட்டத்தில் ஜெயித்த அருள்வேல் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைனில் ரம்மி விளையாடி சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்ததாக கூறப்படுகிறது. விட்ட பணத்தை பிடிப்பதற்காக பண்ருட்டியில் உள்ள அரசியல் செல்வாக்குமிக்க பைனான்சியர் ஒருவரிடம் லட்சக் கணக்கில் பணம் கடனாகப் பெற்று அதனையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பறிகொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் கவனம் இல்லாததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  

 



வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்று குழம்பிப் போன அருள்வேல் தனது மனைவி திவ்யா மற்றும் மூன்று வயது மகனுடன் சொந்த ஊரான பண்ருட்டிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அருள்வேலின் மனைவி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட அருள்வேல் தனது தந்தை சிற்றரசு மற்றும் ராஜலட்சுமி ஆகியோருடன் பண்ருட்டியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பைனான்சியர் கொடுத்த பணத்தை கேட்டு ஆபாசமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

​    ​rummy


கடன் தொகை 50 லட்சத்தை தாண்டியதால் இந்த தொகையை எப்படி கட்டுவது என்று அருள்வேலின் தாய் ராஜலட்சுமியும் தந்தை சிற்றரசும் தவித்து வந்தனர். ராஜலட்சுமி ஓய்வு பெற்ற செவிலியர் என்றும் கௌரவமான குடும்பத்தை என்றும் கூறப்படுகிறது. கந்து வட்டி கும்பலின் ஆபாச மிரட்டலால் மனம் நொந்து போன ராஜலட்சுமியும் அருள்வேலும் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

​    ​rummy

 

தந்தை சிற்றரசு வெளியே சென்றிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கந்து வட்டி கும்பலின் மிரட்டல் குறித்து ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு பன்ருட்டி காவல் நிலையத்தில் சிற்றரசு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். அரசியல் செல்வாக்கு இருப்பதால் அந்த பைனான்சியர் மீண்டும் வீடு புகுந்து கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் அருள்வேலும் அவரது தாய் ராஜலட்சுமியும் உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

 

​    ​rummy

 

வீட்டில் உள்ள சாமி படத்திற்கு பின்னால் இருந்து ராஜலட்சுமி கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் கடிதத்தில் மகன் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்தது குறித்தும் கந்துவட்டி பைனான்ஸ் மிரட்டல் குறித்தும் ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.